Kathir News
Begin typing your search above and press return to search.

ஜி-20 மாநாட்டில் பிரதமர் மோடியை சந்திக்க ஆவலுடன் காத்திருக்கும் ஜோ பைடன்

ஜி-20 மாநாட்டில் பிரதமர் மோடியை சந்திக்க அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஆர்வம் தெரிவித்துள்ளார்.

ஜி-20 மாநாட்டில் பிரதமர் மோடியை சந்திக்க ஆவலுடன் காத்திருக்கும் ஜோ பைடன்

Mohan RajBy : Mohan Raj

  |  12 Nov 2022 12:58 PM GMT

ஜி-20 மாநாட்டில் பிரதமர் மோடியை சந்திக்க அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஆர்வம் தெரிவித்துள்ளார்.

இந்தோனேசியாவின் பாலியில் 14ஆம் தேதி தொடங்கும் இரண்டு நாள் ஜி உச்சி 20 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடியை சந்திக்க ஆவலாக இருப்பதாக அமெரிக்க அதிபர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அமெரிக்க பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சலிவன் வாஷிங்டனில் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் கூறியதாவது. டிசம்பர் 1 முதல் ஜி-20 கூட்டமைப்புக்கு இந்தியா ஓராண்டு காலம் தலைமை தாங்க உள்ளது எனவே இதில் அமெரிக்கா ஈடுபடுவது உறுதி என கூறினார்.

மேலும் மோடி ஏற்கனவே வெள்ளை மாளிகைக்கு வந்துள்ளதையும் இரு தலைவர்களும் மிகவும் எதார்த்தமான ஆக்கபூர்வமான உறவை வளர்த்து வருவதையும் அவர் சுட்டிக்காட்டினார். இரண்டு தலைவர்களும் இந்திய அமெரிக்க நட்புறவை வலுப்படுத்த அவரவர் தரப்பில் பொதுவான ஆர்வம் காட்டி வருவதாகவும் ஜேக் சலிவன் தெரிவித்துள்ளார்.


Source - Polimer News

Next Story
கதிர் தொகுப்பு
Trending News