Kathir News
Begin typing your search above and press return to search.

கர்நாடக கோவில்களில் திப்பு சுல்தானை நினைவு கூறும் சலாம் ஆரத்தி - கொடுங்கோலனுக்கு பயந்து மாற்றப்பட்ட மத சடங்கு!

கர்நாடக கோவில்களில் திப்பு சுல்தானை நினைவு கூறும் சலாம் ஆரத்தி - கொடுங்கோலனுக்கு பயந்து மாற்றப்பட்ட மத சடங்கு!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  21 May 2022 6:22 AM GMT

கர்நாடக மாநிலம் மேல்கோட் சாளுவநாராயணா கோவில் நிர்வாகம், தினசரி மாலை சடங்கின் பெயரை, 'தீவடிகே சலாம்' என்பதை, 'சந்தியா ஆரத்தி' என மாற்ற, கர்நாடக முஸ்ராய் துறைக்கு, மனு அளித்துள்ளது.

மாண்டியாவில் உள்ள மேல்கோட்டை கோயிலில் தினமும் நடக்கும் சலாம் ஆரத்தியை சந்தியா ஆரத்தி என மாற்ற வேண்டும் என இந்து ஆர்வலர்கள் பக்தர்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

கோரிக்கையை அடுத்து, இது தொடர்பாக பாண்டவபுரா உதவி ஆணையர் மற்றும் கோயில் செயல் அலுவலரிடம் மாவட்ட நிர்வாகம் அறிக்கை கேட்டது. துணை கமிஷனர் சி.எஸ்.அஸ்வதி, தற்போது முசரை கமிஷனருக்கு, 'சந்தியா ஆரத்தி' என பெயர் மாற்றம் செய்ய கடிதம் எழுதியுள்ளார். பெயர் மாற்றம் குறித்து முசரை துறை இன்னும் பரிசீலிக்கவில்லை.

முன்னதாக, விஷ்வ ஹிந்து பரிஷத்இதேபோன்ற கோரிக்கையை முன்வைத்தது, அவர்கள் கொல்லூர் மூகாம்பிகை கோயிலில் திப்பு சுல்தானை நினைவுகூரும் சடங்கான 'சலாம் ஆரத்தி'யை அகற்ற வேண்டும் என்று கோயில் நிர்வாகக் குழுவிடம் வலியுறுத்தியது .

கொடுங்கோலன் திப்பு சுல்தானின் ஆட்சிக் காலத்தில் 'சலாம் ஆரத்தி' என்ற நடைமுறை தொடங்கப்பட்டது , அவர் கோயில் பூசாரிகள் அவரது மரியாதைக்காக தலைமைக் கடவுளுக்கு சிறப்பு ஆரத்தி செய்ய வேண்டும் என்று கட்டளையிட்டார். கொல்லூர் மூகாம்பிகை உட்பட பல முக்கிய இந்து கோவில்கள், அவை அழியாமல் பாதுகாக்க சமரசமாக திப்பு சுல்தான் பெயரில் சிறப்பு ஆரத்திகளை நடத்தியது.

கர்நாடக மாநிலத்தில் ஹைதர் அலி மற்றும் திப்பு சுல்தான் ஆட்சியின் போது சலாம் ஆரத்தி அறிமுகப்படுத்தப்பட்டது.

Input From: Opindia



Next Story
கதிர் தொகுப்பு
Trending News