Kathir News
Begin typing your search above and press return to search.

காசி தமிழ்ச் சங்கம்: வாரணாசி செல்லும் ரயில்களுக்கு போலீஸ் பாதுகாப்பு அதிகரிப்பு! அச்சுறுத்தல் பின்னணியா?

காசி தமிழ் சங்கம் நிகழ்ச்சிக்காக செல்லும் ரயில்களுக்கு போலீசார் பலத்த பாதுகாப்பு கொடுத்து இருக்கிறார்கள்.

காசி தமிழ்ச் சங்கம்: வாரணாசி செல்லும் ரயில்களுக்கு போலீஸ் பாதுகாப்பு அதிகரிப்பு! அச்சுறுத்தல் பின்னணியா?

Bharathi LathaBy : Bharathi Latha

  |  25 Nov 2022 3:20 AM GMT

வாரணாசியில் கடந்த 15 ஆம் தேதி தொடங்கிய காசி தமிழ் சங்கம் நிகழ்ச்சி கடந்த 17ஆம் தேதி தொடங்கி அடுத்த மாதம் 16ஆம் தேதி வரை நடைபெறுகிறது. எனவே ஒரு மாதம் காசி தமிழ் சங்கம் சார்பில் நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது. இதில் தமிழகத்தைச் சேர்ந்த 2492 பிரதிநிதிகள் பயணம் செய்ய இருக்கிறார்கள். காசிக்கும் தமிழகத்திற்கும் இடையே தொன்மையான நாகரீகப் பிணைப்புகளும்,பல நூற்றாண்டு கால அறிவு படைப்புகளும் மீட்டுருவாக்கம் செய்வதற்கான நிலை இந்த ஒரு பயிற்சி காணப்படுகிறது.


காசி தமிழ் சங்கம் நிகழ்ச்சிக்கு வாரணாசியில் இருந்து கடந்த 17ஆம் தேதி தொடங்கி பதினாறாம் தேதி வரை நடப்பதால் இதன் ஒரு பகுதியாக காசி தமிழகம் இடையே தொடர்புகளை நேரடியாக கொணர்வதை சென்னை ஐஐடி மற்றும் பல்கலைக்கழகம் சார்பில் அறிஞர்கள் இடையே கல்வி சார்பறி மாற்றங்கள் கருத்தரங்குகள் விவாதங்கள் இடம் பெற்றுள்ளனர். இரு பிராந்திய மக்களிடையே உறவை ஆளப்படுத்துவது இதன் பறந்த நோக்கமாகும்.


இன்றைய நிகழ்ச்சியில் பிரதிநிதிகள் பங்கேற்க வசதியாக தமிழகத்தில் இருந்து காசி வாரணாசிக்கு 13 வயதில் இயக்கப்பட உள்ளன. இந்த ரயில்கள் தமிழகத்தைச் சேர்ந்த 2500 க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் பயணம் செய்ய உள்ளனர். இதன் காரணமாக நேற்று பண்ருட்டி வழியாக சென்று ரயிலுக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் தலைமையில் பலத்த பாதுகாப்பு கொடுக்கப்பட்டு இருந்தது. எந்த விதமான அசம்பாவித சம்பவங்களும் நடைபெற்ற விடக்கூடாது என்பதற்காக இந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருக்கிறது.

Input & Image courtesy: Maalaimalar news

Next Story
கதிர் தொகுப்பு
Trending News