Kathir News
Begin typing your search above and press return to search.

ஞாயிற்றுக்கிழமையும் அரசு ஊழியர்களுக்கு வேலை - கேரள அரசின் செயலை கண்டித்த KCBC?

ஞாயிற்றுக்கிழமைகளில் அரசு ஊழியர்களை வேலை செய்ய வைக்கும் கேரள அரசின் செயலை கண்டித்து கேரள கத்தோலிக்க பிஷப் கவுன்சில் கருத்து தெரிவித்துள்ளது.

ஞாயிற்றுக்கிழமையும் அரசு ஊழியர்களுக்கு வேலை - கேரள அரசின் செயலை கண்டித்த KCBC?

Bharathi LathaBy : Bharathi Latha

  |  2 Oct 2022 1:38 AM GMT

கேரள அரசாங்கம் தற்போது ஞாயிற்றுக்கிழமையும் ஊழியர்களுக்கு வேலையை கொடுத்து வருகின்றது. கேரளா அரசின் இந்த ஒரு செயலை கேரள கத்தோலிக்கப் பிஷப் கவுன்சில் விமர்சித்து இருக்கிறது. "கிறிஸ்தவர்களைப் பொறுத்தவரை, ஞாயிற்றுக்கிழமைகள் மத முக்கியத்துவம் வாய்ந்தவை" என்று KCBC குறிப்பிட்டது. "இந்த ஞாயிற்றுக்கிழமை அக்டோபர் 2 காந்தி ஜெயந்தியின் ஒரு பகுதியாக மாணவர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்காக பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்த மாநில அமைச்சரவை முடிவு செய்துள்ளது.


சீரோ மலபார் சர்ச் உட்பட பெரும்பாலான கத்தோலிக்கப் பிரிவுகளில் ஞாயிற்றுக் கிழமைகளில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படுகின்றன. கிறிஸ்தவ குழந்தைகளுக்கான மத போதனை அல்லது மத போதனை வகுப்புகள் பெரும்பாலும் ஞாயிற்றுக் கிழமைகளில் நடத்தப்படுகின்றன. சமீப காலமாக ஞாயிற்றுக் கிழமைகள் வேலை நாட்களாக மாற்றப்படுவதாக கவுன்சில் குற்றம் சாட்டியுள்ளது. தொடர்ச்சியாக பல்வேறு ஞாயிற்றுக்கிழமைகளில் கேரளா அரசு, அரசு ஊழியர்களுக்கு வேலையை கொடுத்து வருகின்றன.


"கேரளாவில் அரசு ஊழியர்களுக்கு ஞாயிற்றுக்கிழமையாக இருந்த ஜூன் 30-ம் தேதி வேலை நாளாக இருந்தது. ஓணம் பண்டிகையின் ஒரு பகுதியாக இரண்டாவது சனிக்கிழமை நடைபெறும் பாரம்பரிய படகுப் போட்டி இந்த முறை ஞாயிற்றுக்கிழமைக்கு மாற்றப்பட்டது. மேலும் பல போட்டித் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. ஞாயிற்றுக்கிழமைகளில் இது ஒரு ட்ரெண்டாகி வருகிறது. கேரள கத்தோலிக்க பிஷப்ஸ் கவுன்சில் இந்த நடைமுறையை கடுமையாக எதிர்க்கிறது. மேலும், அக்டோபர் 2 ஆம் தேதி மாநிலம் தழுவிய நிகழ்ச்சிகளை அக்டோபர் 1 அல்லது அக்டோபர் 3 ஆம் தேதிக்கு மாற்றுமாறு மாநில அரசை வலியுறுத்துகிறோம் என்று KCBC சார்பாக வலியுறுத்தப்பட்டு உள்ளது.

Input & Image courtesy: News

Next Story
கதிர் தொகுப்பு
Trending News