Kathir News
Begin typing your search above and press return to search.

கேரளா தங்கம் கடத்தல் வழக்கு: பிலீவர்ஸ் தேவாலயத்திற்கும் தொடர்பு? அதிரடி சோதனையில் அமலாக்கத்துறை!

கேரளா தங்கம் கடத்தல் வழக்கு: பிலீவர்ஸ் தேவாலயத்திற்கும் தொடர்பு? அதிரடி சோதனையில் அமலாக்கத்துறை!
X

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  20 July 2022 7:49 AM IST

கேரள தங்கக் கடத்தல் குற்றவாளி ஸ்வப்னா சுரேஷ் மற்றும் ஷாஜ் கிரண் ஆகியோருக்கு பிலீவர்ஸ் தேவாலயம் உடன் தொடர்பு இருப்பது தெரிய வந்த நிலையில், ருவல்லாவில் உள்ள தேவாலயத்தில் அமலாக்க இயக்குநரகம் சோதனை நடத்தியது. 15 அதிகாரிகள் கொண்ட குழு சோதனையில் எடுபட்டது.

தங்கக் கடத்தல் வழக்கில் முதல்வர் பினராயி விஜயன் மற்றும் அவரது குடும்பத்தினர் மீதான குற்றச்சாட்டுகளில் இருந்து பின்வாங்குமாறு கிரண் தன்னை மிரட்டியதாக ஸ்வப்னா குற்றம் சாட்டியிருந்தார். தன் குற்றச்சாட்டை நிரூபிக்க, கிரணுடன் ஒரு தொலைபேசி உரையாடலை வெளியிட்டார், அதில் அவர் தன்னை தேவாலயத்தின் இடைத்தரகர் என்று கூறிக்கொண்டார்.

கடந்த மாதம், ஸ்வப்னா சுரேஷ், தங்கக் கடத்தல் வழக்கில், கேரள முதல்வர் பினராயி விஜயன் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு தொடர்பு இருப்பதாகக் கூறி, சிஆர்பிசியின் 164வது பிரிவின் கீழ், மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் தனது அறிக்கையை சமர்ப்பித்தார்.

Input From: Republic

Next Story
கதிர் தொகுப்பு
Trending News