Begin typing your search above and press return to search.
கேரளாவில் கோயில்கள் திறப்பு.. கொரோனா வழிகாட்டு நெறிமுறை வெளியீடு.!
வழிபாட்டு தலங்களை திறக்க அரசு அனுமதி வழங்கியது. அதன்படி கோயல்கள், சர்சுகள், மசூதிகள் உட்பட வழிபாட்டு தலங்கள் திறக்கப்பட்டன. அதனுடன் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளும் அரசு அறிவித்துள்ளது. அதன்படி ஒரே நேரத்தில் 15 பேருக்கு மட்டுமே கோயிலுக்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டது.

By : Thangavelu
கேரளாவில் கொரோனா ஊரடங்கில் தளர்வு அறிவிக்கப்பட்டது. இதனால் வழிபாட்டு தலங்களும் திறக்கப்பட்டுள்ளது.
கேரளாவில் கொரோனா வைரஸ் தொற்றின் 2வது அலை தொற்று பரவல் அதிகரித்துபோது, அனைத்து வழிகாட்டு தலங்களையும் அம்மாநில அரசு மூடியது. இதனிடையே தொற்று பரவல் குறைந்து வரும் நிலையில், பல்வேறு தளர்வுகளை அரசு அறிவித்து வருகிறது.
இந்நிலையில், வழிபாட்டு தலங்களை திறக்க அரசு அனுமதி வழங்கியது. அதன்படி கோயல்கள், சர்சுகள், மசூதிகள் உட்பட வழிபாட்டு தலங்கள் திறக்கப்பட்டன. அதனுடன் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளும் அரசு அறிவித்துள்ளது. அதன்படி ஒரே நேரத்தில் 15 பேருக்கு மட்டுமே கோயிலுக்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டது.
அதன்படி திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோவிலில் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர்.
Next Story
