Kathir News
Begin typing your search above and press return to search.

மிஷனரி பள்ளியில் பாலியல் துஷ்பிரயோகம் - பாதிரியார் உட்பட இரண்டு பேர் கைது!

கொல்கத்தாவில் மிஷனரிகள் பள்ளியில் பாலியல் வன்கொடுமை காரணமாக பாதிரியார் உட்பட இரண்டு பேர் கைது.

மிஷனரி பள்ளியில் பாலியல் துஷ்பிரயோகம் - பாதிரியார் உட்பட இரண்டு பேர் கைது!

Bharathi LathaBy : Bharathi Latha

  |  17 Nov 2022 7:02 AM GMT

கொல்கத்தா காவல் துறையினர் பெண்களைத் துன்புறுத்தியதற்காக தொண்டு இல்லம் நடத்தி வந்த தேவாலய பாதிரியாரையும் அவரது ஊழியர்களையும் கைது செய்தனர். கிறிஸ்தவ பாதிரியார் மீது 23 வயது பெண் புகார் அளித்ததை அடுத்து அருண் ஜோசப் ராஜ் என்று பாதிரியார் மற்றும் அவரது சக பணியாளர்களான லட்சுமி மற்றும் ராஜியா ஆகியோரை போலீசார் கைது செய்தனர். ஹரிதேவ்பூர் ஆனந்தப்பள்ளி என்ற தொண்டு இல்லத்தில் தான் நீண்ட நாட்களாக மானபங்கம் செய்யப்பட்டதாக அந்த பெண் தனது புகாரில் கூறியுள்ளார்.


அவர் இரண்டு தனித்தனி கடிதங்களை சமர்ப்பித்து, கிறிஸ்தவ பாதிரியார் மற்றும் அவரது இரண்டு ஊழியர்களுக்கு எதிராக புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடங்கினர். குற்றம் சாட்டப்பட்டவர் கடந்த 22 ஆண்டுகளாக இந்த அமைப்பை நடத்தி வருகிறார். நீண்ட காலமாக சிறுமிகளை துஷ்பிரயோகம் செய்து துன்புறுத்தி வந்ததாக புகார் அளித்தவர் தெரிவித்தார்.


உண்மையில், அருண்ராஜின் அட்டூழியத்தால் ஒரு இளம்பெண் தற்கொலை செய்துகொண்டார். இதன் காரணமாக இவர் மீது ஏற்கனவே வழக்கு பதிவும் செய்யப்பட்டிருக்கிறது. குறிப்பாக தற்கொலை செய்து கொண்ட அந்த பெண்ணின் வீட்டை சோதனை செய்யும் போது போலீசாரிடம் பாதிரியார் துன்புறுத்தியதாக அவர் எழுதிய கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

Input & Image courtesy: India Today News

Next Story
கதிர் தொகுப்பு
Trending News