Kathir News
Begin typing your search above and press return to search.

லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதி கைது - சதித்திட்டம் என்ன?

காஷ்மீரில் சோபூர் மாவட்டத்தை சேர்ந்த லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதி கைது செய்யப்பட்டார்

லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதி கைது - சதித்திட்டம் என்ன?
X

KarthigaBy : Karthiga

  |  4 Sept 2022 6:00 PM IST

காஷ்மீரின் சோபூர் மாவட்டம் ஷங்கர்குண்ட் நகரில் ராணுவ வீரர்கள் மத்திய ரிசர்வ் படை போலீசார் மற்றும் காஷ்மீர் போலீசார் குழுவாக இணைந்து சோதனைச் சாவடி அமைத்து சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் வந்த நபர் ஒருவரை பாதுகாப்பு படையினர் தடுத்து நிறுத்தி சோதனை செய்ய முயன்றனர். ஆனால் அந்த நபர் பாதுகாப்பு படையினரை பார்த்ததும் அங்கிருந்து தப்பி ஓடினார்.


எனினும் பாதுகாப்பு படையினர் அவரை விரட்டி சென்று மடக்கி பிடித்து கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் அவர் சோபூர் மாவட்டத்தை சேர்ந்த சாகிப் ஷகீல்தார்எ ன்பதும் அவர் லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதி என்பதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவர் மீது வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






Next Story
கதிர் தொகுப்பு
Trending News