Kathir News
Begin typing your search above and press return to search.

"தான் ஒரு இந்து" எனக் கூறி இந்து பெண்ணை கர்பமாகிய கிறிஸ்துவ இளைஞன்! இந்துப் பெண் மதமாறினால் மட்டுமே திருமணம்!

போபாலில் அமைந்துள்ள காவல் நிலையத்தில் புகார் !

தான் ஒரு இந்து எனக்  கூறி இந்து பெண்ணை கர்பமாகிய கிறிஸ்துவ இளைஞன்! இந்துப்  பெண் மதமாறினால் மட்டுமே திருமணம்!

DhivakarBy : Dhivakar

  |  27 Sep 2021 9:14 AM GMT

ஒரு வாரத்திற்கு முன்பு மத்திய பிரேதசத்திலுள்ள போபாலில் தன் காதலன் தன்னை கட்டாயப்படுத்தி மதம் மாற்ற முற்படுவதாக ஒரு பெண் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். குற்றம் சாட்டப்பட்டவர் ஒரு கிறிஸ்தவ இளைஞர். குற்றம் சாட்டிய பாதிக்கப்பட்ட பெண் ஒரு இந்து.

அந்த இந்து பெண்ணிடம் அந்த இளைஞர் தான் ஒரு இந்து என பொய்கூறி அந்த பெண்ணை தன் காதல் வலையில் விழவைத்துள்ளார். இருவரும் ஆர்யா சமாஜ் கோயிலில் இந்து முறைப்படி திருமணம் செய்துகொண்டனர்.

அந்தப் பெண் இப்பொழுது கர்ப்பமாக இருப்பதாக கூறப்படுகிறது. இதன் பின்பு அந்த இளைஞன் தான் கிறிஸ்தவ மதத்தை தழுவியவன் என்றும், இதனால் அந்தப் பெண்ணை கிறிஸ்துவ மதத்திற்கு மாற வற்புறுத்தியதாக கூறப்படுகிறது.

ஆனால் அந்தப் பெண் கிறிஸ்தவ மதத்திற்கு மாற மறுத்துவிட்டார். அதற்காக அவரை காதலன் துன்புறுத்தியதாக கூறப்படுகிறது. அந்த பெண் தன் வாழ்க்கை கேள்விக்குறியாகிவிட்டது என்று தெரிந்த பின் போபாலில் அமைந்துள்ள காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். காவல்துறை அந்த புகாரை பெற்றுக் கொண்டவுடன் அந்த இளைஞன் மீது வழக்குப் பதிவு செய்துள்ளது.

Image : Indian Express

Next Story
கதிர் தொகுப்பு
Trending News