Kathir News
Begin typing your search above and press return to search.

விவசாய போராட்டம் குறித்துப் பேசிய மத்திய அமைச்சர் தன்வேவை அச்சுறுத்திய மகாராஷ்டிரா அமைச்சர்.!

விவசாய போராட்டம் குறித்துப் பேசிய மத்திய அமைச்சர் தன்வேவை அச்சுறுத்திய மகாராஷ்டிரா அமைச்சர்.!

விவசாய போராட்டம் குறித்துப் பேசிய மத்திய அமைச்சர் தன்வேவை அச்சுறுத்திய மகாராஷ்டிரா அமைச்சர்.!

Saffron MomBy : Saffron Mom

  |  11 Dec 2020 6:30 AM GMT

தற்போது போராட்டம் நடத்தி வரும் விவசாயிகள் போராட்டத்திற்குச் சீனா மற்றும் பாகிஸ்தானால் தூண்டப்படுகின்றனர் என்று மத்திய அமைச்சர் ரோசாஹேப் தன்வே கூறியதை அடுத்து, மகாராஷ்டிரா அமைச்சர் பச்சு கடு மத்திய அமைச்சரைத் தாக்குவதாக அச்சுறுத்தியுள்ளார். தன்வே அவ்வாறு கூறிய பொழுது, அவரது வீட்டிற்குச் சென்று அவரை அடிக்கவேண்டும் என்று கடு கூறினார்.

கடு அச்சால்புர் தொகுதியில் சுயாட்சி MLA ஆவார் மற்றும் மகாராஷ்டிராவில் MVA அரசாங்கத்தில் அமைச்சராக உள்ளார். நேற்று மகாராஷ்டிராவில் சுகாதார மையம் திறப்பு விழாவில் பேசிய தன்வே, நடந்து வரும் விவசாயிகளின் போராட்டத்திற்குப் பின்னணியில் பாகிஸ்தான் மற்றும் சீனா இருக்கின்றது என்று குற்றம் சாட்டினார். இதே போன்றே CAA விற்கு எதிராக முஸ்லீம்கள் தூண்டப்பட்டனர் என்றும் தன்வே கூறினார்.

புதிய விவசாய சட்டங்களுக்கு எதிராகப் போராட்டம் நடத்திவரும் விவசாயிகளின் பின்னணியில் காலிஸ்தான் இருந்து வருகின்றது. அந்த விவசாயிகள் போராட்டத்தில் சில தீவிரவாத அறிக்கைகளுக்கான அடையாளங்களும் காணப்பட்டன. மேலும் இந்தியாவில் மற்றும் வெளிநாடுகளில் காலிஸ்தான் நிகழ்ச்சிகளைப் பரப்புவதற்கு விவசாயிகளின் போராட்டத்தைப் பயன்படுத்தி வருகின்றது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News