Kathir News
Begin typing your search above and press return to search.

85வது 'மன் கி பாத்' நிகழ்ச்சி: பிரதமர் மோடி இன்று நாட்டு மக்களிடம் உரையாற்றுகிறார்!

பிரதமராக மோடி கடந்த 2014ம் ஆண்டு பதவியேற்றார். அப்போது முதல் மன் கி பாத் நிகழ்ச்சி என்ற வானொலி மூலமாக மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் உரையாற்றுவதை வழக்கமாக கொண்டுள்ளார்.

85வது மன் கி பாத் நிகழ்ச்சி: பிரதமர் மோடி இன்று நாட்டு மக்களிடம் உரையாற்றுகிறார்!

ThangaveluBy : Thangavelu

  |  30 Jan 2022 5:06 AM GMT

பிரதமராக மோடி கடந்த 2014ம் ஆண்டு பதவியேற்றார். அப்போது முதல் மன் கி பாத் நிகழ்ச்சி என்ற வானொலி மூலமாக மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் உரையாற்றுவதை வழக்கமாக கொண்டுள்ளார்.

அதே போன்று இந்த மாத்திற்கான மன் கி பாத் நிகழ்ச்சி இன்று காலை 11.30 மணியளவில் தொடங்க உள்ளது. இன்று நடைபெறும் நிகழ்ச்சி 85வது மன் கி பாத் ஆகும். இந்நிகழ்ச்சியில் ஒவ்வொரு மாதமும் குடிமக்களை நேரடியாக தொடர்பு கொண்டு சாதனை படைத்தவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவிக்கிறார். அதே போன்று தற்போது ஒமைக்ரான், கொரோனா வைரஸ் பெருகி வருவதையும் அதற்கான தடுப்பு நடவடிக்கைகளில் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பதனையும் எடுத்து கூறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Source: Daily Thanthi

Image Courtesy: The Economics Times

Next Story
கதிர் தொகுப்பு
Trending News