Begin typing your search above and press return to search.
‘மன் கி பாத்’ நிகழ்ச்சி.. கொரோனா தொற்று குறித்து கருத்துக்களை தெரிவிக்கலாம்.. பிரதமர் ட்வீட்.!
‘மன் கி பாத்’ நிகழ்ச்சி.. கொரோனா தொற்று குறித்து கருத்துக்களை தெரிவிக்கலாம்.. பிரதமர் ட்வீட்.!

By :
பிரதமர் மோடி மாதத்தில் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் வானொலியில் ‘மன் கி பாத்’ என்ற நிகழ்ச்சியில் நாட்டு மக்களிடம் உரையாற்றுகிறார். இந்த ஆண்டின் கடைசி ‘மன் கி பாத்’ நிகழ்ச்சி வருகிற 27ம் தேதி ஒலிபரப்பாகிறது.
அதில் பேசுவதற்கு, கொரோனா வைரஸ் தொற்று வரலாற்றில் மோசமான ஆண்டாக கருதப்படும் 2020-ம் ஆண்டை பற்றி மக்களின் பார்வை மற்றும் 2021-ம் ஆண்டில் மக்களின் அதிக எதிர்பார்ப்பு எது? என்பது பற்றிய கருத்துக்களை தெரிவிக்குமாறு பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார்.
கருத்துகளை ‘மை கவ்’ இணையதளத்திலோ, ‘நமோ செயலி’ மூலமோ அல்லது 1800-11-7800 என்ற எண்ணில் குரல் பதிவு மூலமாகவோ அனுப்பலாம் என பிரதமர் மோடி தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.
Next Story