Kathir News
Begin typing your search above and press return to search.

பசுமை போக்குவரத்தை ஊக்கப்படுத்த நடவடிக்கை: பிரதமர் மோடி!

பசுமை போக்குவரத்தை ஊக்கப்படுத்த நடவடிக்கை: பிரதமர் மோடி!

ThangaveluBy : Thangavelu

  |  6 March 2022 12:56 PM GMT

மகாராஷ்டிரா மாநிலம், புனேவில் மெட்ரோ ரயில் திட்டத்தை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்தார். அங்கு மேலும் சில திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும் வைத்தார்.

இதன் பின்னர் பிரதமர் மோடி பேசுகையில், நீர் மேலாண்மை பற்றி மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக ஒவ்வொரு வருடமும் 'நதி உத்சவ்' என்கின்ற பெயரில் விழாக்களும் நடைபெறும் என்றார். இதன் மூலம் மக்களுக்கு ஒவ்வொரு துளி நீரின் முக்கியத்துவத்தையும் உணர்த்தும் என பிரதமர் கூறினார்.

அது மட்டுமின்றி அனைத்து நகரங்களிலும் பசுமை போக்குவரத்தை ஊக்கப்படுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மின்சார வாகனங்களின் பயன்பாட்டையும் ஊக்கப்படுத்தப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Source: Daily Thanthi

Image Courtesy: ANI

Next Story
கதிர் தொகுப்பு
Trending News