Kathir News
Begin typing your search above and press return to search.

உண்டியலில் கிடைந்த ஆணுறை - தொடர்ந்து கோவில்களை இழிவு படுத்தும் "மர்ம" நபர்கள்!

Miscreants vandalise temple, damage Nandi and Naga idols, locals raise concerns about security

உண்டியலில் கிடைந்த ஆணுறை - தொடர்ந்து கோவில்களை இழிவு படுத்தும் மர்ம நபர்கள்!

MuruganandhamBy : Muruganandham

  |  19 Oct 2021 7:37 AM GMT

கர்நாடகா மாநிலம் மங்களூருவில் பைகம்பாடி கர்கேரா மூலஸ்தான ஜரந்தாய தைவஸ்தானம் மற்றும் நாக பிரம்ம பீடத்தை நள்ளிரவில் மர்மநபர்கள் அடித்து நொறுக்கியுள்ளனர்.

தகவல்களின்படி, பக்தர்கள் கோவிலில் பிரார்த்தனை செய்ய சென்றபோது விஷயம் தெரிய வந்தது. குற்றம் சாட்டப்பட்டவர்கள் நாகர் சிலை மற்றும் நந்தியின் கல் உருவத்தை சேதப்படுத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அலமாரியை உடைத்து தாவிஸ்தானத்தின் உடமைகள் அனைத்தையும் வீசினார்கள். அதே நேரத்தில், கோவிலின் வாயில்களும் அழிக்கப்பட்டன.

பக்தர்கள் கோவில் நிர்வாகக் குழுவை எச்சரித்துள்ளனர். அதன் பிறகே போலீசில் புகார் அளிக்கப்பட்டது. தகவல் கிடைத்ததும், போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இது குறித்து விசாரணையை தொடங்கினர். கோவில் இழிவுபடுத்தப்பட்டதைத் தொடர்ந்து, உள்ளூர் மக்கள் மத ஸ்தலத்திற்கு பாதுகாப்பு கோரியுள்ளனர். இது கொள்ளை முயற்சி என போலீசார் சந்தேகிக்கின்றனர். இருப்பினும், இதுபோன்ற சம்பவம் வெளிச்சத்துக்கு வருவது இது முதல் முறை அல்ல.

முன்னதாக, இந்த ஆண்டு ஏப்ரல் மாதம், மங்களூருவில் உள்ள ஒரு கோவிலின் உண்டியில் ஆணுறை கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்கள் மங்களூரு ஜோகத்தே பகுதியைச் சேர்ந்த ரஹீம் (32) மற்றும் தௌபிக் (35) என்பது தெரிய வந்துள்ளது.

செய்தியாளர் சந்திப்பில் பேசிய போலீஸ் கமிஷனர் என்.சசிகுமார், இந்த ஆண்டு ஜனவரி மற்றும் மார்ச் மாதங்களுக்கு இடையில், உல்லால், கத்ரி மற்றும் பாண்டேஷ்வர் காவல்நிலையங்களில் ஐந்து வழக்குகள் பதிவாகியுள்ளன. இருப்பினும், கோவில்களை இழிவுபடுத்திய குற்றவாளிகளை போலீசாரால் கண்டுபிடிக்க முடியவில்லை எனத் தெரிவித்துள்ளார்.





Next Story
கதிர் தொகுப்பு
Trending News