ஆளில்லா விமானத்தை தாக்கி அழித்த ஏவுகணை - QRSAM ஏவுகணையின் இரண்டாவது சோதனை வெற்றி.!
ஆளில்லா விமானத்தை தாக்கி அழித்த ஏவுகணை - QRSAM ஏவுகணையின் இரண்டாவது சோதனை வெற்றி.!

By : Muruganandham M
இந்தியாவின் துரிதமாக செயலாற்றும் தரையிலிருந்து வானுக்கு ஏவப்படும் ஏவுகணை (QRSAM), சரியாக இலக்கை மீண்டுமொருமுறை தாக்கி வெற்றி அடைந்துள்ளது. ஏவுகணை சோதனைத் தொடரில் இது இரண்டாவது ஆகும்.ஒடிசா கடற்கரைக்கு அருகே சந்திப்பூரில் உள்ள ஒருங்கிணைந்த சோதனை மையத்திலிருந்து இன்று பிற்பகல் 3.42 மணியளவில் இந்த ஏவுகணை ஏவப்பட்டது.
பன்ஷீ என்று அழைக்கப்படும் விமானி இல்லாத இலக்கு விமானத்தை மீண்டும் இந்த ஏவுகணை சரியாக தாக்கியது. ஏவுகணை சோதனையின் வெற்றியை அடுத்து, மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனமான டிஆர்டிஓ- வின் விஞ்ஞானிகளைப் பாராட்டினார். கடந்த 13-ஆம் தேதி நடைபெற்ற முதல் சோதனையிலும் இந்த ஏவுகணை சரியாக இலக்கைத் தாக்கி ஒரு புதிய மைல்கல்லை எட்டியது குறிப்பிடத்தக்கது.
ரேடார்கள் இலக்கை நீண்ட தூரத்திலிருந்து பெற்று, மிஷன் கணினி தானாகவே ஏவுகணையை செலுத்தும் வரை அதைக் கண்காணித்தது. ராடார் தரவு இணைப்பு மூலம் தொடர்ச்சியான வழிகாட்டுதல் வழங்கப்பட்டது. முழு தானியங்கி கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு அமைப்பு, கண்காணிப்பு அமைப்பு மற்றும் மல்டி ஃபங்க்ஷன் ரேடார்கள் ஆகியவற்றை உள்ளடக்கிய ஆயுத அமைப்பின் வரிசைப்படுத்தல் கட்டமைப்பில் விமான சோதனை நடத்தப்பட்டது. QRSAM ஆயுத அமைப்பு, இந்த நடவடிக்கையில் இயங்கக்கூடியது
ராடார், டெலிமெட்ரி மற்றும் எலக்ட்ரோ ஆப்டிகல் சென்சார்கள் போன்ற பல கருவிகள் பயன்படுத்தப்பட்டன, அவை முழுமையான விமானத் தரவைக் கைப்பற்றி ஏவுகணையின் செயல்திறனை அதிகரித்தன.
