விரைவில் ஸ்கைபஸ் கொண்டு வரப்போகும் மோடி அரசு - நிதின் கட்கரி கூறிய சூப்பர் தகவல்
விரைவில் ஸ்கை பஸ் அறிமுகப்படுத்த இருப்பதாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி அறிவித்துள்ளது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
By : Mohan Raj
விரைவில் ஸ்கை பஸ் அறிமுகப்படுத்த இருப்பதாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி அறிவித்துள்ளது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
இந்தியாவில் தேர்ந்தெடுக்கப்பட்ட சில வழித்தடங்களில் விரைவில் ஸ்கை பஸ்கள் எனப்படும் பறக்கும் பேருந்துகள் அறிமுகம் ஆக உள்ளன.
ஸ்கை பஸ் என்பது மெட்ரோ ரயில் போலவே இருக்கும் ஒரு ரயில்வே அமைப்பாகும் மணிக்கு சுமார் 100 கிலோ மீட்டர் வேகத்தில் இந்த பேருந்துகளில் பயணிக்கலாம் எரிபொருளுக்கு மாற்றாக மின்சார ஆற்றலை பயன்படுத்தலாம்.
முதற்கட்டமாக டெல்லி மற்றும் ஹரியானாவின் சில பகுதியில் ஸ்கை பஸ்கள் இயக்க மத்திய அரசு பரிசீலித்து வருவதாகவும் இதற்கான நடவடிக்கைகள் துவங்கப்பட்டுள்ளதாகவும் மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக போக்குவரத்து நெரிசல் மற்றும் காற்று மாசு வெகுவாக குறையும் எனவும் வருங்காலத்திற்கான புதிய முயற்சியாக இருக்கும் எனவும் நிதின் கட்கரி குறிப்பிட்டார்.