அரசியல் ஆதரவுடன் நக்சல்கள் சதி - பிரதமர் மோடியின் குற்றச்சாட்டு பின்னணி என்ன?
அரசியல் ஆதரவுடன் வளர்ச்சித் திட்டங்களை தடுக்க நகர்ப்புற நக்சல்கள் சதி செய்வதாக பிரதமர் மோடி குற்றச்சாட்டு.
![அரசியல் ஆதரவுடன் நக்சல்கள் சதி - பிரதமர் மோடியின் குற்றச்சாட்டு பின்னணி என்ன? அரசியல் ஆதரவுடன் நக்சல்கள் சதி - பிரதமர் மோடியின் குற்றச்சாட்டு பின்னணி என்ன?](https://kathir.news/h-upload/2022/09/25/1418778-adobeexpress2022092423192401.webp)
குஜராத் மாநிலம் நர்மதா மாவட்டம் ஏத்தா நகரில் மாநில சுற்றுச்சூழல் மந்திரிகளின் தேசிய மெயில் மாநாடு நேற்று நடந்தது. இதனை காணொளி காட்சிகள் மூலமாக பிரதமர் மோடி அவர்கள் தொடங்கி வைத்தார். அப்பொழுது அவர் பேசுகையில், இந்தியாவின் வளர்ச்சியை தடுக்க உலக நிறுவனங்களும் அறக்கட்டளைகளும் ஒரு மாயயை உருவாக்குகிறார்கள். அவர்களை தாழத்துக்கு ஏற்ப நகர்ப்புற நக்சல்கள் நடனம் ஆடிக்கொண்டே இருக்கிறார். நீதித்துறை, அரசு, உலக வங்கி ஆகியவை மீது கூட செல்வாக்கு செலுத்தி வருகிறார்கள். உதாரணமாக குஜராத் மாநிலத்தில் நர்மதை ஆறு மேல் சர்தார் அணை கட்டுவதற்கு பண்டிதர் நேரு அடிக்கல் நாட்டினார்.
ஆனால் அந்த திட்டம் சுற்றுச்சூழலுக்கு தீங்கு ஏற்படுத்தும் என்ற போர்வையில் நகர்ப்புற நக்சல்கள் தடுத்தார்கள். பல ஆண்டுகளில் பின்னர் கூட அந்த திட்டத்தை நிறுத்தி வைத்தார்கள். நான் வந்த பிறகுதான் அந்த திட்டம் முடிக்கப்பட்டது. திட்டம் நிறைவடைந்த பிறகு சுற்றுப்புற நக்சல்களின் பிரச்சாரம் எவ்வளவு பொய்யானது? என்று எல்லோரும் உணர்ந்து கொண்டனர்..இன்று நர்மதை நதிப்பகுதி சுற்றுச்சூழல் தன்னார்வையார்களால் ஆன்மீக தலமாக உருவெடுத்துள்ளது.
நகர்ப்புற நக்சல்களின் சதியை முறியடிக்க மாநிலங்களில் முழுமையான அணுகுமுறையை பின்பற்ற வேண்டும். 2027ஆம் ஆண்டிற்குள் கார்பன் வெளியேற்றத்தை பூஜ்ஜியமாக இந்தியா இலக்கு நிர்ணயித்துள்ளது. உயிரியல் எரிபொருள் பயன்பாட்டை மாநிலங்கள் ஊக்குவிக்க வேண்டும். பெட்ரோல், எத்தனை நாள் கலப்பது விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்கும் மத்திய அரசின் கொள்கைகளை மாநில அரசு அமல்படுத்த வேண்டும் என்று பேசினார்.
Input & Image courtesy: Oneindia News