Kathir News
Begin typing your search above and press return to search.

உலகை ஈர்க்கும் இந்தியாவின் புதுமை கண்டுபிடிப்புகள்: பிரதமர் மோடி பெருமிதம்!

இந்தியாவின் தொழில் நுட்பம் மற்றும் புதுமையான கண்டுபிடிப்புகள் உலகத்தில் அனைவரையும் ஈர்த்து வருவதாக பிரதமர் மோடி குறிப்பிட்டார்.

உலகை ஈர்க்கும் இந்தியாவின் புதுமை கண்டுபிடிப்புகள்: பிரதமர் மோடி பெருமிதம்!

Bharathi LathaBy : Bharathi Latha

  |  18 Nov 2022 3:13 AM GMT

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் நடைபெற்ற தொழில்நுட்ப மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் காணொளி காட்சி வாயிலாக இன்று கலந்து கொண்டார். பல ஆண்டுகளாகவே இந்தியாவின் புதுமையான கண்டுபிடிப்புகள் குறியீட்டில் பெங்களூரு தான் முதலிடம் பிடித்து வருகிறது என்று அவர் குறிப்பிட்டார். மேலும் இந்தியாவின் தொழில் நுட்பம் மற்றும் புதுமையான கண்டுபிடிப்புகள் உலக அரங்கில் இந்தியாவை ஒரு புதிய இடத்திற்கு கொண்டு போய் சேர்த்து இருக்கிறது.


அனைவருடைய உலகத்தின் பார்வையை ஈர்க்கும் விதமாக இந்தியாவின் கண்டுபிடிப்புகள் அமைந்து இருப்பதாகவும் பிரதமர் குறிப்பிட்டார். பதில் அரசு தொழில்நுட்பத்தில் இளைஞர்களின் திறமையை உறுதி செய்து இருக்கிறது. புதுமையான கண்டுபிடிப்புகள் உள்ள நாடுகளின் பட்டியலில் 2015 ஆம் ஆண்டு இந்தியா 81 வது இடத்தில் தான் இருந்தது. ஆனால் தற்போது நாற்பதாவது இடத்திற்கு முன்னேறி இருக்கிறது கடந்த ஆண்டு இந்தியாவில் யுனிகான்ஸ் எனப்படும் ஸ்டார்ட் அப் களின் நிறுவனங்களின் எண்ணிக்கை இரட்டிப்பாக இருக்கிறது.


உலகின் மூன்றாவது மிகப்பெரிய பூத்தொழில் நிறுவனங்கள் உள்ள நாடாக இந்தியா திகழ்கிறது. இந்தியாவில் முதலீட்டாளர்கள் சிறப்பு கம்பங்கள் குறித்து வரவேற்கப்படுகிறார்கள். வறுமை ஒழிப்பு பெயரில் இந்தியாவில் தொழில்நுட்பத்தை ஆயுதமாகக் கொண்டு பயன்படுத்தப்படுகிறது. ஏழை மக்களுக்கு அரசாங்கம் செய்யும் பண உதவிகள் நேரடியாக அவருடைய வங்கி கணக்குகளிலேயே செலுத்தப் படுகிறது. எனவே ஊழலுக்கான வழி வகைகளை அது குறித்துள்ளது இவ்வாறு பிரதமர் மோடி அவர்கள் குறிப்பிட்டிருக்கிறார்.

Input & Image courtesy: Maalaimalar News

Next Story
கதிர் தொகுப்பு
Trending News