Kathir News
Begin typing your search above and press return to search.

தேனி முதல் மதுரை வரை மோடியின் மாஸ்டர் பிளான் - மகிழ்ச்சி வெள்ளத்தில் மக்கள்!

போடி (தேனி) முதல் உசிலம்பட்டி (மதுரை) வரையிலான பசுமை வழி சாலை விரைவில் நான்கு வழி சாலையாக விரிவுபடுத்தப்படும் என்று தேசிய நெடுஞ்சாலை துறை அறிவித்துள்ளது.

தேனி முதல் மதுரை வரை மோடியின் மாஸ்டர் பிளான் - மகிழ்ச்சி வெள்ளத்தில் மக்கள்!

KarthigaBy : Karthiga

  |  8 Sep 2023 11:30 AM GMT

போடி (தேனி) முதல் உசிலம்பட்டி (மதுரை) வரையிலான பசுமை வழி சாலை விரைவில் நான்கு வழி சாலையாக விரிவுபடுத்தப்படும் என்று தேசிய நெடுஞ்சாலை துறை அறிவித்துள்ளது. அதோடு திண்டுக்கல்-தேனி-குமிளி நெடுஞ்சாலை NH-183ல் 138 கிமீ நீளமுள்ள நான்கு/ஆறு வழிப்பாதைக்கான விரிவான திட்ட அறிக்கையை (DPR) தயாரிப்பதற்காக NHAI டெண்டர் விடுத்துள்ளது.


தமிழ்நாட்டில் மத்திய அரசாலும், மாநில அரசாலும் பல்வேறு சாலைகள் விரிவுபடுத்தப்பட்டு வருகின்றன. ஒரு பக்கம் மாநில அரசு சார்பாக சென்னை, கோவை, மதுரை போன்ற மாவட்டங்களில் சாலைகளை அகலப்படுத்துவது, புதிய புட் கோர்ட்டுகளை உருவாக்குவது, சாலை ஓரம் புதிய அலங்கார அமைப்புகளை உருவாக்குவது போன்ற பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்த உள்ளனர். மத்திய சாலை போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரி இது தொடர்பாக சில நாட்களுக்கு முன் அறிவிப்பு வெளியிட்டு இருந்தார். இப்போது இதற்கான டெண்டர் விடுக்கப்பட்டு உள்ளது.


NHAI ஆனது 700 கோடி செலவில் போடி (தேனி) முதல் உசிலம்பட்டி (மதுரை) வரையிலான 64 கிமீ கிரீன்ஃபீல்ட் நெடுஞ்சாலையை மேம்படுத்த உள்ளது. இங்கு விரிவுபடுத்தும் பணிகளை செய்து, புதிய நான்கு வழிச்சாலை அமைக்க உள்ளது இதற்கான.விரிவான திட்ட அறிக்கை (டிபிஆர்) தயாரிக்கப்பட்டு வருகிறது.

சமீபத்தில்தான் மதுரை - போடி இடையே மீண்டும் ரயில் சேவை தொடங்கப்பட்டது. அகல ரயில் பாதை பணிகள் முடிந்த நிலையில் தற்போது அங்கே ரயில் சேவை தொடங்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில்தான் போடி (தேனி) முதல் உசிலம்பட்டி (மதுரை) வரையிலான பசுமை வழி சாலை விரைவில் நான்கு வழி சாலையாக விரிவுபடுத்தப்படும் என்று தேசிய நெடுஞ்சாலை துறை அறிவித்துள்ளது. இதனால் இந்த பாதையில் பயணம் இன்னும் எளிதாகும். அதோடு மிக வேகமாக மதுரையில் இருந்து போடிக்கு சென்று சேர முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.


SOURCE :Oneindia.com


Next Story
கதிர் தொகுப்பு
Trending News