கடற்படை தினம்.. பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா வாழ்த்து
கடற்படை தினம்.. பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா வாழ்த்து
By : Kathir Webdesk
கடற்படை தினத்தை முன்னிட்டு இந்திய கடற்படை வீரர்களுக்கு பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வாழ்த்து தெரிவித்துள்ளனர். பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: வீரம் நிறைந்த நமது கடற்படை வீரர்களுக்கும், அவர்களது குடும்பத்தினருக்கும் கடற்படை தின வாழ்த்துகள்.
இந்திய கடற்படை வீரர்கள் பயமின்றி நமது கடல் எல்லையை பாதுகாக்கின்றனர். மேலும், தேவைப்படும் போதெல்லாம் நம் நாட்டு மக்களுக்கு உதவியும் செய்து வருகின்றனர்.
பல நூறு ஆண்டுகளாக இருந்து வரும் வளமான கடல் பாரம்பரியத்தையும் நாம் நினைவுகூர்வோம், என்று பிரதமர் மோடி தனது ட்விட்டர் வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
அதே போன்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தனது வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது: கடற்படை தினமான இன்று வீரமிக்க நமது இந்திய கடற்படை வீரர்களுக்கும், அவர்களது குடும்பத்தினருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
கடல் எல்லைகளைப் பாதுகாத்து, இயற்கைப் பேரிடர்களின் போது தாய் நாட்டிற்காக சேவையாற்றும் கடற்படையினரை எண்ணி இந்தியா பெருமிதம் கொள்கிறது. என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.