Kathir News
Begin typing your search above and press return to search.

நேபாள வெளியுறவுத்துறை அமைச்சர் இந்தியா வருகை - பேச்சுவார்த்தை ஆரம்பம்!

நேபாள வெளியுறவுத்துறை அமைச்சர் இந்தியா வருகை - பேச்சுவார்த்தை ஆரம்பம்!

நேபாள வெளியுறவுத்துறை அமைச்சர் இந்தியா வருகை - பேச்சுவார்த்தை ஆரம்பம்!

Saffron MomBy : Saffron Mom

  |  16 Jan 2021 8:45 AM GMT

இந்திய - நேபாள கூட்டு ஆணையத்தின் கீழ் இந்தியா மற்றும் நேபாளம் ஆகிய இரு நாடுகளின் இருதரப்பு உறவுகளில் பல்வேறு அம்சங்களை இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் மற்றும் நேபாள வெளியுறவுத்துறை அமைச்சர் பிரதீப் குமார் காயாலி ஆகியோர் சந்தித்து வெள்ளிக்கிழமை பேச்சுவார்த்தை நடத்தினர்.

மூன்று நாள் பயணமாக வியாழக்கிழமை முதல் புது டெல்லிக்கு வந்த காயாலி, இந்திய-நேபாளத்தின் சமீபத்திய பிரச்சனைகளுக்கு பிறகு இந்தியாவிற்கு விஜயம் செய்த மிக மூத்த நேபாள அதிகாரி ஆவார்.

கடந்த மாதத்தில் நேபாள பிரதமர் கேபி ஓலி அந்த நாட்டு நாடாளுமன்றத்தை கலைத்து முன்கூட்டியே தேர்தலுக்கு அழைப்பு விடுத்துள்ளார். இந்தப் பெரிய அரசியல் கொந்தளிப்பு பிறகு நேபாளத்தை சேர்ந்த மூத்த அரசியல்வாதி இந்தியாவிற்கு வருகை தருவது இது முதல் முறையாகும்.

இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவத்ஸாவாவின் கூற்றுப்படி, எல்லைப் பிரச்சினைகளைப் பற்றி இந்த கூட்டத்தில் பேச்சுவார்த்தை இருக்காது எனவும் JCM அமைப்பின் பேச்சுவார்த்தைகளும், எல்லை பிரச்சினைகளும் தனித்தனியான வழிமுறை என்று ஸ்ரீவத்சவா வியாழக்கிழமை ஊடகங்களுக்கு தெரிவித்தார்.

இருந்தாலும் காயலியின் வருகை நேபாளத்தில் ஒரு முக்கியமான நேரத்தில் வருகிறது. இந்தியா, நேபாளத்தில் அதிக அளவு செல்வாக்கு செலுத்தும் சீனா அந்நாட்டு உள்நாட்டு விவகாரங்களில் தலையிட முயற்சிப்பதாக கவலை கொள்கிறது. இந்தியா நேபாளத்தை தன்னுடைய மிக நெருக்கமான கூட்டாளியாக கருதுகிறது. இந்தியாவின் செல்வாக்கு மண்டலத்தில் சீனாவின் ஊடுருவல் குறித்து கவலை அடைந்துள்ளது.

எல்லைப் பிரச்சனை குறித்து நேபாளத்துடன் சமாதானத்தை நீடிக்க இந்தியா வழிகளை கண்டறிய வேண்டும்.

2020 ஆம் ஆண்டில் இந்தியாவிற்கும் நேபாளத்துக்கு மிடையே எல்லைகளில் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் வெளிப்படையாக முன்னுக்கு வந்தன.

அந்நாட்டின் பிரதமர் ஓலியின் அரசாங்கம் நேபாளத்தின் புதிய அரசியல் வரைபடத்தை வெளியிட்டது. அதில் இந்திய பகுதிகளான களபாணி,லிம்பியதுரா, லிப்புலெக் ஆகியவையை உள்ளடக்கியது.

இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான எல்லைப் பகுதியில் உள்ள பகுதியில் இந்தியா ஒரு சாலையை திறந்தது. இந்த சாலைப் பகுதி இந்தியாவிற்கு மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த இடமாகும்.

வெளியுறவுத் துறை அமைச்சகம் எல்லைப் பிரச்சினை விவாதிக்கப்படவில்லை என்று கூறினாலும் மறைமுகமாக திரைக்குப்பின் நிலையில் இவ்விவகாரம் விவாதிக்கப்படுவதில் ஆச்சரியமில்லை.

ஏனெனில் கடந்த வாரம் போலி அந்நாட்டு பாராளுமன்றத்தில் நேபாளத்தின் புதிய அரசியல் வரைபடத்தை பற்றிய விவாதத்தை குறித்து இந்திய வருகை இருக்கும் என்று ஓலி தெரிவித்திருந்தார்.

நேபாளத்தில் பல உள்நாட்டு அரசியல் பிரச்சனைகள் நடந்து கொண்டிருக்கின்றன. நேபாள மக்களின் மத்தியில் இந்தியாவிற்கு என்று ஒரு தனிப்பட்ட இடமிருக்கிறது. இந்தியாவிலிருந்து இந்தியாவின் எந்த ஒரு செயலும் நடவடிக்கையோ நேபாளத்தில் அரசியலில் மற்றும் சமூகத்தில் ஒரு பெரிய எதிர்வினையை ஏற்படுத்துகிறது.

நேபாளத்தில் தேர்தல் நடக்கவிருக்கும் நிலையில், இந்தியாவிற்கு எதிராக நாங்கள் இருக்கிறோம் என்ற நிலையை எடுத்து அந்நாட்டு அரசியல்வாதிகள் எதிராளிகளை தாக்க பயன்படுத்தி வருகின்றன.

உதாரணமாக கம்யூனிஸ்ட் கட்சியின் உடைந்துபோன மற்றொரு பிரிவின் தலைவர் பிரசந்தா கூறுகையில் ஓலி, ஆளுங்கட்சியை பிரித்து நாடாளுமன்றத்தை கலைத்து இந்தியாவின் வேண்டுகோளின் பேரில் என்ற குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

அரசியலில் அவர்கள் மாறிமாறி பேசும் அவதூறில் இந்தியா இடையில் வரக்கூடாது என்பதில் குறியாக இருக்கிறார்கள்.எல்லை கருத்துவேறுபாடுகள் நீக்கப்படா விட்டாலும் சமாதானப் படுத்தப்பட வேண்டும்.

கொரானா வைரஸ் விவகாரத்தில் இந்தியா தடுப்பூசியை சீனாவை விட விரைவாக தயாரித்து நேபாளத்திற்குக்கு உதவி புரிவதும் தற்பொழுது அவசியமான ஒன்றாகும்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News