டெல்லி: காலிஸ்தான் தீவிரவாதிகள் உட்பட ஐந்து பயங்கரவாதிகள் கைது!
டெல்லி: காலிஸ்தான் தீவிரவாதிகள் உட்பட ஐந்து பயங்கரவாதிகள் கைது!
![டெல்லி: காலிஸ்தான் தீவிரவாதிகள் உட்பட ஐந்து பயங்கரவாதிகள் கைது! டெல்லி: காலிஸ்தான் தீவிரவாதிகள் உட்பட ஐந்து பயங்கரவாதிகள் கைது!](https://kathir.news/static/c1e/client/83509/uploaded/6026ebb1e6b7da3755807d6b8b70c819.jpg)
கைது சம்பவம் குறித்துப் பேசிய பத்திரிகையாளர் ராஜ் சேகர் ஜா, மீதமுள்ள இரண்டு பயங்கரவாதிகள் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள் மற்றும் அவர்களில் இரண்டு பேர் முகம்மது அயூப் மற்றும் ஷபீர் என்று அடையாளம் காணப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
Big: Five terrorists arrested in Delhi. Two are Khalistani, three belong to Kashmir. Major terror plot busted by Delhi Police.
— Raj Shekhar Jha (@rajshekharTOI) December 7, 2020
பஞ்சாபில் அக்டோபர் மாதம் ஷவுர்யா சக்ரா விருது பெற்ற பால்விந்தர் சிங் படுகொலை செய்யப்பட்டது ஒரு பயங்கரவாத சம்பவம் என்று காவல்துறை கண்டறிந்ததை அவர் கூறினார். அதே போன்று ஒரு பயங்கரவாத சம்பவத்தை டெல்லியில் நடத்தப் பயங்கரவாதிகள் திட்டமிட்டு இருந்ததாகவும் அவர் தெரிவித்தார்.
மாநில அரசாங்கத்திடம் இருந்து பாதுகாப்பைத் திரும்பப்பெற்ற மூன்று மாதங்களுக்குப் பிறகு சிங் டார்ன் தரனில் பைக்கில் வந்தவர்கள் மூலம் சுட்டுக்கொல்லப்பட்டார். அதில் தொடர்புடைய கொலையாளிகள் குர்ஜீத் சிங் மற்றும் சுக்தீப் சிங் என்று அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அறிக்கையின் படி, ஐந்து தீவிரவாதிகளும் துப்பாக்கிச் சூட்டுக்குப் பின்பு கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து ஆயுதங்கள் மற்றும் குற்றம் சாட்டப்பட்டதற்கான ஆவணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.