Kathir News
Begin typing your search above and press return to search.

கர்நாடக வளர்ச்சிக்கும் பா.ஜ.க.வுக்கும் எடியூரப்பா ஆற்றிய பணிகளை வர்ணிக்க வார்த்தை இல்லை.. பிரதமர் மோடி ட்விட்.!

பாஜகவிற்கு முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பா ஆற்றியுள்ள பணிகளை வர்ணிப்பதற்கு வார்த்தைகள் இல்லை என்று பிரதமர் மோடி புகழாரம் சூட்டியுள்ளார்.

கர்நாடக வளர்ச்சிக்கும் பா.ஜ.க.வுக்கும் எடியூரப்பா ஆற்றிய பணிகளை வர்ணிக்க வார்த்தை இல்லை.. பிரதமர் மோடி ட்விட்.!

ThangaveluBy : Thangavelu

  |  28 July 2021 7:50 AM GMT

பாஜகவிற்கு முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பா ஆற்றியுள்ள பணிகளை வர்ணிப்பதற்கு வார்த்தைகள் இல்லை என்று பிரதமர் மோடி புகழாரம் சூட்டியுள்ளார்.


கர்நாடகாவில் இரண்டு ஆண்டுகள் முதலமைச்சராக நிறைவு செய்த எடியூரப்பா தனது பதவியை ராஜினாமா செய்தார். இதனை தொடர்ந்து அவர் சார்ந்த சமூகமான லிங்காயத்து பிரிவை சேர்ந்த ஒருவரைதான் மீண்டும் முதலமைச்சராக்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது. அதன்படி பசவராஜ் பொம்மை முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்டார். அவர் இன்று முறைப்படி ஆளுநர் மாளிகையில் பதவி ஏற்றுக்கொண்டார்.


இந்நிலையில், பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: கர்நாடகாவின் வளர்ச்சிக்கும், பாஜக வெற்றிக்கும் எடியூரப்பா ஆற்றிய பணிகளை வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது. இதற்காக பல ஆண்டுகள் கடுமையான உழைப்பை கொடுத்தார்.


கர்நாடக மாநிலத்தின் அனைத்து பகுதிகளிலும் சென்று மக்களின் ஆதரவை பெற்று விளங்குகிறார். சமூக நலத்திட்டங்கள் மீதான ஆர்வத்தால் மக்கள் எடியூரப்பாவை ஆதரித்தனர் எனக் கூறியுள்ளார்.


மேலும், மற்றொரு ட்வீட்டர் பதிவில், கர்நாடக மாநிலத்தின் முதலமைச்சராக பதவியேற்றுள்ள பசவராஜ் பொம்மைக்கு வாழ்த்துக்கள். அவர் சட்டமன்றம் மற்றும் நிர்வாகம் பற்றி அதிகமான அனுபவம் கொண்டுள்ளார். மாநில வளர்ச்சிக்கு தொடர்ந்து பாடுபடுவார் என்று நம்புகிறேன். எனக் பதிவிட்டுள்ளார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News