Kathir News
Begin typing your search above and press return to search.

'அக்டோபர் 1' : தூய்மை பணிக்காக பிரதமர் மோடி அழைப்பு- தூய்மையான இந்தியா அனைவரின் பொறுப்பு

நாடு முழுவதும் நாளை தூய்மை பணி தொடங்க இருப்பதால் பிரதமர் மோடி அனைவருக்கும் அழைப்பு விடுத்துள்ளார்.

அக்டோபர் 1 : தூய்மை பணிக்காக பிரதமர் மோடி அழைப்பு- தூய்மையான இந்தியா அனைவரின் பொறுப்பு

KarthigaBy : Karthiga

  |  30 Sep 2023 10:30 AM GMT

நாடு முழுவதும் நாளை தூய்மைப் பணிகளை மேற்கொள்ளும் திட்டத்திற்கு மத்திய அரசு ஏற்பாடு செய்துள்ளது. இதில் பொதுமக்கள் தன்னெழுச்சியாக பங்கேற்க வேண்டும் என பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் 'அக்டோபர் 1ஆம் தேதி காலை 10 மணிக்கு ஒரு முக்கிய தூய்மைக்காக நாம் ஒன்று கூடுகிறோம். ஒரு தூய்மையான இந்தியா நாம் அனைவரது பொறுப்பாகும்.


மேலும் ஒவ்வொரு முயற்சியும் முக்கியமானது. தூய்மையான எதிர்காலத்தை உருவாக்க இந்த உன்னத முயற்சியில் இணையுங்கள்' என அழைப்பு விடுத்துள்ளார். தேசத்தந்தை மகாத்மா காந்தி தனது வாழ்நாள் முழுவதும் தூய்மைப் பணிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்திருந்தார். எனவே அவரது பிறந்த நாளை முன்னிட்டு மத்திய அரசு இந்த திட்டத்தை செயல்படுத்துவது குறிப்பிடத்தக்கது.


SOURCE :DAILY THANTHI

Next Story
கதிர் தொகுப்பு
Trending News