டெல்லியில் பாகிஸ்தான் ஜிந்தாபாத் கோஷம்.. 5 பேரை கைது செய்த போலீஸ்.!
டெல்லியில் பாகிஸ்தான் ஜிந்தாபாத் கோஷம்.. 5 பேரை கைது செய்த போலீஸ்.!
By : Kathir Webdesk
டெல்லியில் உள்ள மார்க்கெட் பகுதியில் நள்ளிரவில் 5 பேர் கொண்ட கும்பல் பாகிஸ்தான் ஜிந்தாபாத் என்ற கோஷம் போட்டுள்ளனர். அவர்களை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர்.
டெல்லி, கான் மார்க்கெட் பகுதியில் நள்ளிரவில் சுமார் 1 மணியளவில் பாகிஸ்தான் ஜிந்தாபாத் கோஷங்களை எழுப்பிய 2 ஆண்களும் 3 பெண்களையும் போலீசார் அதிரடியாக கைது செய்தனர். டெல்லி போலீசாருக்கு தகவல் ஒன்று கிடைத்துள்ளது. அதாவது கான் மார்க்கெட் பகுதியில் பாகிஸ்தானுக்கு எதிராக ஜிந்தாபாத் கோஷங்கள் எழுப்பி வருவதாக கூறப்படுகிறது. அவர்களை கைது செய்ய வேண்டும் என அப்பகுதியினர் போலீசாருக்கு கோரிக்கை வைத்தனர்.
இதனை தொடர்ந்து 5 பேரையும் டெல்லி போலீசார் கைது செய்தனர். மேலும், கோஷம் எழுப்பிய குடும்ப உறுப்பினர்களிடமும் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக டெல்லி போலீசார் தகவல் தெரிவித்தனர். இந்தியாவில் இருந்து கொண்டு பாகிஸ்தானுக்கு ஆதரவாக கோஷம் எழுப்புவதை யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாது. அது போன்றவர்கள் மீது கடுமையான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்பது அனைவரின் விரும்பமும் ஆகும்.