Kathir News
Begin typing your search above and press return to search.

ரூ. 20,000 ற்கு விற்கப்பட்ட குழந்தையை மீட்ட இந்து அமைப்பு!

ரூ. 20,000 ற்கு விற்கப்பட்ட குழந்தையை மீட்ட இந்து அமைப்பு!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  21 Oct 2022 1:58 AM GMT

ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் பழங்குடியின மக்கள் முட்மா கண்காட்சியை பார்க்கச் சென்றுள்ளனர். அப்போது அங்கிருந்த ஒரு பழங்குடியின தம்பதியிடம் இருந்த கைக்குழந்தையை, சிறுபான்மையின குடும்பத்தினர் 20,௫௦௦ ரூபாய்க்கு ஒப்பந்தம் போட்டு வாங்கியுள்ளார்.

கண்காட்சி முடிவடைந்த பிறகே கிராம மக்களுக்கு குழந்தை விற்றது தெரிய வந்தது. உடனடியாக விஷ்வ இந்து பரிஷத் அமைப்பின் இளைஞர் பிரிவான பஜ்ரங் தள் என்ற அமைப்பினருக்கு தகவல் அளித்துள்ளனர்.

இதனை ஆய்வு செய்த பஜ்ரங் தள் அமைப்பினர், குழந்தையை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்துள்ளனர். காவல்துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில், குழந்தையை பெற்றோரிடம் கேட்டபோது குழந்தையின் தந்தை ஒப்புதல் அளிக்கவில்லை என்பதும் தெரிய வந்தது.

எனவே அவரை மது அருந்த வைத்து, அவரது விரல் ரேகையை ஒப்பந்தத்தில் பதிய வைத்ததும் தெரிய வந்துள்ளது.

Input From: ETV

Next Story
கதிர் தொகுப்பு
Trending News