கேரளாவிற்கு 12 சிறுமிகள் கடத்தல் - பாதிரியார், புரோக்கர்கள் உள்பட 3 பேர் கைது!

By : Kathir Webdesk
ராஜஸ்தான் மாநிலத்திலிருந்து கேரளா நோக்கி ஓகா எக்ஸ்பிரஸ் ஜூலை 28ம் தேதி வந்தது. கோழிக்கோடு ரயில் நிலையம் வந்தடைந்த போது, ரயிலில் 12 சிறுமிகள் சந்தேகத்திற்கிடமாக இருந்துள்ளனர். இதனால், ரயில்வே போலீசார் சிறுமிகளிடம் விசாரணையில் ஈடுபட்டனர். அப்போது சிறுமிகள் கடத்தப்பவரப்பட்டிருப்பது தெரியவந்தது. இதையடுத்து சிறுமிகளை கூட்டி வந்த 3 பேரும் கைது செய்யப்பட்டனர்.
போலீசார் விசாரணை நடத்தினர். கேரளாவில் கருணா பவன் என்னும் அறக்கட்டளையின் பாதிரியார் ஜேக்கப் வர்கீஸ் கடத்தலின் மூளையாக செயல்பட்டு இருக்கிறார். ராஜஸ்தானை சேர்ந்த புரோக்கர்கள் லோகேஷ் குமார், ஷியாம் லால் இருவரது உதவியுடன் 12 சிறுமிகளையும் கடத்தி வந்துள்ளார்.
ஏற்கனவே கருணா பவன் அறக்கட்டளையின் உரிமம் ரத்து செய்யப்பட்டது. இருந்த போதிலும் வர்கீஸ் சட்டவிரோதமாக நடத்திவந்துள்ளார். சிறுமிகளும் அனைவரும் குழந்தைகள் நல காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.
இதுகுறித்து ராஜஸ்தான் அரசிற்கும், சிறுமிகளின் பெற்றோருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. பெரும்பாவூர் புல்லுவாஜியில் உள்ள கிறிஸ்தவ இல்லத்திற்கு சிறுமிகள் கொண்டு செல்லப்பட இருந்தனர். இது குறித்து மேலும் விசாரணை நடந்திவருவதாக போலீசார் தெரிவித்தனர்.
Input From: Etv
