Kathir News
Begin typing your search above and press return to search.

தாழ்த்தப்பட்ட சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை: போக்சோ சட்டத்தின் கீழ் பாதிரியார் கைது!

ஆந்திர மாநிலத்தில் பல்வேறு தாழ்த்தப்பட்ட வகுப்பை சார்ந்த சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்த பாதிரியாரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.

தாழ்த்தப்பட்ட சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை: போக்சோ சட்டத்தின் கீழ் பாதிரியார் கைது!

ThangaveluBy : Thangavelu

  |  13 Nov 2021 7:56 AM GMT

ஆந்திர மாநிலத்தில் பல்வேறு தாழ்த்தப்பட்ட வகுப்பை சார்ந்த சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்த பாதிரியாரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். இந்தியாவில் சமீபகாலமாக பாதிரியார்கள் தொடர்ந்து சிறுமிகள் மற்றும் பெண்களுக்கு எதிராக பாலியல் அத்துமீறல்களை செய்து வருகின்றனர். அப்பாவி ஏழைகளை வேண்டும் என்று பணத்தை கொடுத்து மதமாற்றம் செய்து அவர்களின் வாழ்க்கையை சீரழித்து வருகின்றனர்.


மதமாறிய பின்னர் பெண்களை சர்ச்சுகளுக்கு வரவழைத்து பாதிரியார்கள் அடிக்கடி அத்துமீறும் சம்பவங்கள் ஆங்காங்கே நடைபெற்று வருகிறது. அதே போன்ற சம்பவம் தற்போது ஆந்திர மாநிலம், கர்னூல் மாவட்டத்தில் உள்ள ரவீந்திர பிரசன்னா குமார் என்ற பாதிரியார் தாழ்த்தப்பட்ட சிறுமிகளுக்கு பாலியல் துன்புறுத்தல் செய்து வந்துள்ளார். இது பற்றிய பாதிக்கப்பட்ட சிறுமிகள் பெற்றோர்களிடம் கூறியுள்ளனர்.


இதனையடுத்து பாதிரியார் மீது போலீசில் புகார் வரவே, பாதிரியார் ரவீந்திர பிரசன்னாவை போக்சோ சட்டத்தின் கீழ் ஆந்திர போலீசார் கைது செய்துள்ளனர். ரவீந்திர பிரசன்னா தேசிய கிறிஸ்தவ வாரியத்தின் மாவட்ட தலைவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Source, Image Courtesy: Twiter

Next Story
கதிர் தொகுப்பு
Trending News