'மாநில அரசுகள் செலுத்த வேண்டிய தொகையை செலுத்துங்கள்' - பிரதமர் மோடி எதை குறிப்பிட்டார்?
மாநில அரசுகள் மின் நிறுவனங்களுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகைகளை விரைவில் வழங்க வேண்டும் என பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
By : Mohan Raj
மாநில அரசுகள் மின் நிறுவனங்களுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகைகளை விரைவில் வழங்க வேண்டும் என பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
டெல்லியில் உச்சிவால் பாரத் என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரதமர் மோடி நேற்று உரையாற்றினார். அந்த நிகழ்ச்சியில் அவர் பேசும்பொழுது, 'மாநில அரசுகள் மின் நிறுவனங்களுக்கு கொடுக்க வேண்டிய 75 ஆயிரம் கோடி மானிய நிலுவைத் தொகை விரைவில் கொடுக்க வேண்டும்' என கேட்டுக்கொண்டார்.
மேலும் இது குறித்து பேசிய அவர் வளர்ச்சியை விரிவுபடுத்துவதில் மேலும் பங்காற்ற வேண்டிய விஷயத்தில் வலுப்படுத்த சுமார் 2.5 லட்சம் கோடி ரூபாய் மின் பயன்பாட்டு நிலுவைத் தொகை மாநில அரசுகள் வழங்க வேண்டும்.
அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியாவின் முன்னேற்றத்தை விரைவுப்படுத்துவதில் எரிசக்தி மற்றும் மின்துறைகள் பெரும் பங்கு வகிக்க உள்ளது, பல்வேறு மாநிலங்களுக்கான மின் வாரியங்களுக்கான நிலுவைத் தொகை ஒரு லட்சம் கோடிக்கு மேல் உள்ளது. மின்சார உற்பத்தியில் இருந்து வீடு வீடாக விநியோகம் செய்வது வரைக்கான நடவடிக்கைகளுக்கு பொறுப்பான நிறுவனங்கள் சுமார் 2.5 லட்சம் கோடி ரூபாய் நிலுவைத் தொகை சிக்கலில் சிக்கி உள்ளன.
இந்த பணத்தை மின் உற்பத்தி நிறுவனங்களுக்கு வழங்க வேண்டும் பல அரசுத்துறைகள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் மின்பகிர்மான நிறுவனங்களுக்கு 60,000 கோடி ரூபாய்க்கு மேல் பாக்கி வைத்துள்ளனர். மின்விநியோகத் துறையில் இழப்புகள் இரட்டை இலக்கத்தில் இருக்கும் நிலையில் வளர்ந்த நாடுகளில் ஒற்றை இலக்கத்தில் உள்ளது.
மேலும் கடந்த எட்டு ஆண்டுகளில் நாட்டில் சுமார் ஒரு லட்சத்து 70 ஆயிரம் மெகாவாட்மின் உற்பத்தி திறன் சேர்க்கப்பட்டுள்ளது. ஒரே தேசம் ஒரே மின் உற்பத்தி திட்டம் இன்று நாட்டின் பலமாக மாறி உள்ளது முழு நாட்டையும் இணைக்கும் வகையில் சுமார் 1,70,000 சர்க்யூட் கிலோமீட்டர் டிரான்ஸ்மிஷன் போடப்பட்டுள்ளன. சௌபாக்கியா திட்டத்தின் கீழ் 31 கோடி இணைப்புகள் வழங்குவதன் மூலம் நாடு செறிவூட்டல் நிலைக்கு நெருங்கி வருகிறது என கூறினார்.