Kathir News
Begin typing your search above and press return to search.

கொள்ளை அடிப்பதிலேயே குறியாக இருந்த முந்தைய அரசு - 65000 ஹெக்டேர் நிலப்பரப்பை வளம் கொழிக்க வைக்கும் பிரதமரின் திட்டம்!

PM dedicates to the nation various developmental projects in Mahoba, Uttar Pradesh

கொள்ளை அடிப்பதிலேயே குறியாக இருந்த முந்தைய அரசு - 65000 ஹெக்டேர் நிலப்பரப்பை வளம் கொழிக்க வைக்கும் பிரதமரின் திட்டம்!
X

MuruganandhamBy : Muruganandham

  |  20 Nov 2021 9:34 AM IST

உத்தரப்பிரதேச மாநிலத்தில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார்.

இந்தத் திட்டங்கள், இந்தப் பிராந்தியத்தின் தண்ணீர்ப் பற்றாக்குறை பிரச்சினையை அகற்றுவதுடன், விவசாயிகளுக்குத் தேவையான நிம்மதியைக் கொண்டு வரும். அர்ஜூன் சகாயக் திட்டம், ரட்டவுலி அணை, பாவனி அணை திட்டங்கள், மஜ்கான்-சில்லி தெளிப்பான் திட்டம் ஆகியவை இத்திட்டங்களில் அடங்கும். இந்த திட்டங்களின் மொத்த செலவு ரூ.3250 கோடிக்கும் அதிகமாகும்.

இந்த திட்டங்கள் செயல்படுத்தப்படுவதால், மகோபா, ஹமீர்பூர், பண்டா, லலித்பூர் மாவட்டங்களைச் சேர்ந்த 65000 ஹெக்டேர் நிலப்பரப்பு பாசன வசதி பெறும். இதனால், இந்தப் பிராந்தியத்தைச் சேர்ந்த லட்சக்கணக்கான விவசாயிகள் பலனடைவர். இந்தத் திட்டங்கள் பிராந்தியத்துக்கு குடிநீரையும் வழங்கும்.

இந்தப் பகுதி தண்ணீர் பிரச்சினைகளின் இருப்பிடமாக மாறி, புலப்பெயர்ச்சி பல ஆண்டுகளாக நடந்து வந்ததை பிரதமர் சுட்டிக்காட்டினார். நீர் மேலாண்மையில் இப்பகுதி சிறந்து விளங்கிய வரலாற்றை அவர் நினைவு கூர்ந்தார். முந்தைய அரசுகளின் காலத்தில் படிப்படியாக இந்தப்பகுதி பெரிதும் பாதிக்கப்பட்டு, ஊழல் நிர்வாகத்தால் சீர்கேடு அடைந்தது.

'' இந்தப் பகுதிகளைச் சேர்ந்த பெண்களை மணமுடிக்க மக்கள் தயங்கியதையடுத்து, நிலைமை கவனத்துக்கு வந்தது. தற்போது உபரி நீரால், பெண்கள் திருமண வாழ்த்துகளைப் பெறும் நிலை வந்துள்ளது. மகோபா மக்கள், புந்தேல் காண்ட் மக்கள் இந்தக் கேள்விகளுக்கு விடைகளைத் தெரிந்துள்ளனர்'' என்று பிரதமர் தெரிவித்தார்.

புந்தேல்காண்டைக் கொள்ளையடித்ததன் மூலம் தங்கள் குடும்பங்களுக்கு முந்தைய அரசு நன்மை செய்து கொண்டதாகப் பிரதமர் கூறினார். உங்கள் குடும்பங்களின் தண்ணீர் பிரச்சினையைப் பற்றி அவர்கள் ஒருபோதும் கவலைப்பட்டதில்லை'' என்று பிரதமர் கூறினார். பல பத்தாண்டுகளாக, புந்தேல்காண்ட் மக்கள், தங்களைக் கொள்ளையடிக்கும் அரசுகளைத்தான் நீண்டகாலமாக கண்டு வந்துள்ளதாக கூறிய பிரதமர், முதல்முறையாக புந்தேல்காண்ட் மக்கள், இப்பகுதியின் வளர்ச்சிக்காக உழைக்கும் அரசைக் கண்டு வருகின்றனர் என்றார்.






Next Story
கதிர் தொகுப்பு
Trending News