Kathir News
Begin typing your search above and press return to search.

காந்திக்கு பிறகு பிரதமர் மோடி மட்டும் தான்: பாதுகாப்பு துறை அமைச்சர் புகழாரம்!

மக்களின் உணர்வுகளை புரிந்து கொள்ளக்கூடிய தலைவராக காந்திக்கு பிறகு பிரதமர் மோடி மட்டும் தான் என்று மத்திய அமைச்சர் கூறி இருக்கிறார்.

காந்திக்கு பிறகு பிரதமர் மோடி மட்டும் தான்: பாதுகாப்பு துறை அமைச்சர் புகழாரம்!

Bharathi LathaBy : Bharathi Latha

  |  8 Sep 2022 2:15 AM GMT

நாட்டு மக்களின் உணர்வுகளை புரிந்து கொள்ளக்கூடிய ஒரு தலைவராக மகாத்மா காந்திக்கு பிறகு பிரதமர் நரேந்திர மோடி மட்டும் தான் இருக்கின்றார் என்று பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அவர்கள் பெருமிதம் கொண்டு பேசியிருக்கிறார். புத்தக வெளியீட்டு விழாவில் பாதுகாப்புத்துறை அமைச்சர் இவ்வாறு பேசுகிறார். The Architect of the New BJP: How Narendra Modi Transformed the Party என்ற புத்தகத்தை வெளியீட்டு விழாவில், பங்கேற்ற பாதுகாப்புத்துறை அமைச்சர் பிரதமர் ஆட்சியின் கீழ் நிர்வாக திறன்கள் போல சமகால அரசியல் அவருக்கு இணை யாரும் இல்லை என்றும் கூறுகிறார்.


பிரதமர் நரேந்திர மோடி அவருடைய சித்தாந்தத்தில் சமரசம் செய்யாமல் தன்னுடைய புதிய அணுகுமுறை காரணமாக பாடம் கட்சியை தேர்தலில் வெற்றி பெற வைத்து உள்ளார். அரசியல் நிகழ்வுகள் கடந்த எட்டு ஆண்டுகளின் கட்சியின் வெல்ல முடியாத பயணத்திற்கு பங்களித்து இருக்கிறார். ஆனால் இந்த கருத்தை மக்களிடம் கொண்டு சேர்க்க அவர்களின் நம்பிக்கை வென்றதில் மோடி அவர்களின் யுத்திக்கு இணையாக எதுவும் இல்லை. RSS மற்றும் BJPவால் தனக்கு என்ன பணி ஒதுக்கப்பட்டாலும்? பிரதமர் மோடி அவர்கள் அதை நிறைவேற்றி எதிர்பார்த்ததை விட அதிகமாக வெற்றிகளை வாங்குகிறார்.


நீண்ட காலமாக ஆட்சியில் இருப்பவர்களுக்கு எதிரான செயல்பாடுகள் நடக்கும் என பெரும்பாலும் எண்ணப்பட்டாலும் மக்கள் பிரதமரை கண்டு இன்னும் சோர்வடையவில்லை. அவரது ஆளுமை மற்றும் நிர்வாக திறமைகள் அனைத்தும் தெய்வீக அருள் இல்லாமல் சாத்தியம் இல்லை என்று நான் நம்புகிறேன். சாதி, சமூகம் என்று எல்லையை உடைத்து இருக்கிறார் மோடி அவர்கள் என்று பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியிருக்கிறார்.

Input & Image courtesy:Vikatan News

Next Story
கதிர் தொகுப்பு
Trending News