Kathir News
Begin typing your search above and press return to search.

டேராடூன் - தில்லி இடையிலான வந்தே பாரத் ரயில் சேவை.. தொடங்கி வைத்த பிரதமர் மோடி..

டேராடூன் -தில்லி இடையிலான வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் தொடங்கி வைத்தார்..

டேராடூன் - தில்லி இடையிலான வந்தே பாரத் ரயில் சேவை.. தொடங்கி வைத்த பிரதமர் மோடி..

Bharathi LathaBy : Bharathi Latha

  |  26 May 2023 3:24 AM GMT

டேராடூன் -தில்லி இடையிலான வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் மே 25ம் தேதி தொடங்கி வைத்தார். உத்தராகண்ட் மாநிலத்தின் முதல் வந்தே பாரத் ரயில் இதுவாகும். புதிதாக மின்மயமாக்கப்பட்ட வழித்தடங்களை நாட்டுக்கு அர்ப்பணிக்கும் பிரதமர், உத்தராகண்ட் மாநிலத்தை நூறு சதவீத மின்மயமாக்கப்பட்ட ரயில் பாதை கொண்ட மாநிலமாக அறிவிக்கிறார். டேராடூன் - தில்லி இடையிலான வந்தே பாரத் விரைவு ரயில் சேவையைப் பிரதமர் நரேந்திர மோடி நேற்று மே 25-ம் தேதி காலை 11 மணியளவில் காணொலிக் காட்சி மூலம் தொடங்கிவைத்தார்.


இது உத்தராகண்ட் மாநிலத்தில் அறிமுகம் செய்யப்படும் முதலாவது வந்தே பாரத் ரயில் சேவையாகும். உலகத் தரத்திலான வசதிகளுடன் சிறப்பான பயண அனுபவத்தை இந்த ரயில் வழங்கும். குறிப்பாக, அம்மாநிலத்திற்கு சுற்றுலா செல்வோருக்கு இந்த ரயில் மிகவும் பயனுள்ளதாக அமையும். உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்ட இந்த ரயில், கவாச் தொழில் நுட்பம் உள்ளிட்ட மேம்பட்ட பாதுகாப்பு அம்சங்களை கொண்டுள்ளது.


பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வையின் அடிப்படையில், பொதுப் போக்குவரத்தில் தூய எரிசக்தி பயன்பாடு ஊக்குவிக்கப்படுகிறது. அந்த வகையில் ரயில்வே, நாட்டில் உள்ள ரயில்பாதைகளை முழுமையாக மின்மயமாக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. அந்த நடவடிக்கையை முன்னெடுத்துச் செல்லும் வகையில், உத்தராகண்ட் மாநிலத்தில் புதிதாக மின்மயமாக்கப்பட்ட ரயில் வழித் தடங்களை பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணிக்கவுள்ளார். இதையடுத்து அம்மாநிலத்தில் ரயில் பாதைகள் அனைத்தும் நூறு சதவீத மின்மயமாக்கப்பட்ட வழித்தடங்களாக மாறும். மின்மயமாக்கப்பட்ட ரயில் பாதைகளில் செல்லும் ரயில்கள், அதிக வேகத்துடன் செல்வதுடன், அவற்றின் இழுவைத்திறனும் அதிகரிக்கும்.

Input & Image courtesy: News

Next Story
கதிர் தொகுப்பு
Trending News