Begin typing your search above and press return to search.
பட்டியலினத்தவர் மற்றும் பெண்களை அமைச்சர்களாக நியமித்தது எதிர்க்கட்சிக்கு பிடிக்கவில்லை: பிரதமர் மோடி.!
நாடாளுமன்றம் தொடங்கிய நிலையில் எதிர்க்கட்சிகள் வேண்டும் என்றே அவையை நடத்தவிடாமல் ரகளையில் ஈடுபட்டு வருகின்றனர். ஏன் மத்திய அமைச்சர்கள் மாற்றப்பட்டனர் என்பன கேள்விகளை எழுப்பி கூச்சலிட்டு வருகின்றனர்.

By : Thangavelu
நாடாளுமன்ற மழைக்காலத் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. தொடங்குவதற்கு முன்பாக பிரதமர் மோடி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அனைத்து கேள்விகளையும் எழுப்புங்கள், அனைத்திற்கு மத்திய அரசு பதில் அளிக்கும் என பிரதமர் கூறியிருந்தார்.
இந்நிலையில், நாடாளுமன்றம் தொடங்கிய நிலையில் எதிர்க்கட்சிகள் வேண்டும் என்றே அவையை நடத்தவிடாமல் ரகளையில் ஈடுபட்டு வருகின்றனர். ஏன் மத்திய அமைச்சர்கள் மாற்றப்பட்டனர் என்பன கேள்விகளை எழுப்பி கூச்சலிட்டு வருகின்றனர்.
இதற்கு பதில் அளித்த பிரதமர் மோடி, பட்டியலினத்தவர் மற்றும் பெண்களை அமைச்சர்களாக நியமனம் செய்தது எதிர்க்கட்சிகளுக்கு பிடிக்கவில்லை, அதனால் அமளியில் ஈடுபடுகின்றனர் எனக்கூறினார்.
Next Story
