Kathir News
Begin typing your search above and press return to search.

108 வது இந்திய அறிவியல் மாநாடு - பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் பிரதமர்!

108-வது இந்திய அறிவியல் மாநாட்டை பிரதமர் தொடங்கி வைக்கிறார்.

108 வது இந்திய அறிவியல் மாநாடு - பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் பிரதமர்!

Bharathi LathaBy : Bharathi Latha

  |  3 Jan 2023 1:09 AM GMT

பிரதமர் நரேந்திர மோடி 108-வது இந்திய அறிவியல் மாநாட்டை காணொலி காட்சி வாயிலாக ஜனவரி 3-ந் தேதி அன்று தொடங்கிவைக்கிறார். இந்நிகழ்ச்சி காலை 9.30 மணிக்கு தொடங்குகிறது. ராஷ்ட்ரசந்த் துக்காடோஜி மகராஜ் நாக்பூர் பல்கலைக்கழகத்தின் அமராவதி சாலை வளாகத்தில் இந்நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. மகாராஷ்டிரா பொது பல்கலைக்கழகங்களின் வேந்தருமான பகத் சிங் கோஷ்யாரி, மத்திய அமைச்சரும், ராஷ்ட்ரசந்த் துக்காடோஜி மகராஜ் நாக்பூர் பல்கலைக்கழக நூற்றாண்டு கொண்டாட்டத்தின் ஆலோசனை குழுவின் தலைவருமான திரு நிதின் கட்கரி, மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை அமைச்சர் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் தொடக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவுள்ளனர்.


மகளிர் அதிகாரம் அளித்தலுடன் நீடித்த வளர்ச்சிக்கான அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் என்பது இந்த ஆண்டின் கருப்பொருளாகும். கண்காட்சியில் பங்கேற்க பொது மக்கள் அனுமதிக்கப்படவுள்ளனர். 108-வது இந்திய அறிவியல் மாநாட்டின் தொழில்நுட்ப அமர்வுகள் 14 பிரிவுகளாக நடைபெறவுள்ளன. மேலும் மகளிர் அறிவியல் மாநாடு, விவசாயிகள் அறிவியல் மாநாடு, குழந்தைகள் அறிவியல் மாநாடு, பழங்குடியினர் சந்திப்பு, அறிவியல் மற்றும் சமூக அமர்வு, அறிவியல் தொடர்பாளர்கள் மாநாடு ஆகியவையும் நடைபெறவுள்ளன. நோபல் பரிசு பெற்றவர்கள், இந்திய மற்றும் வெளிநாட்டு முன்னணி ஆராய்ச்சியாளர்கள், அறிவியல், கணித அறிவியல், மருத்துவ அறிவியல், புதிய உயிரியல் உள்ளிட்டவற்றின் வாய்ப்புகள் மற்றும் ஆராய்ச்சிகள் குறித்து எடுத்துரைக்கப்படவுள்ளது.


இந்நிகழ்ச்சியின் முன்னோட்டமாக இந்திய அறிவியல் மாநாட்டின் பாரம்பரிய அறிவு ஜோதி நிகழ்ச்சி நடைபெற்றது. இந்தப் பேரணியில் 400க்கும் மேற்பட்ட பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் பங்கேற்று பல்கலைக்கழக வளாகத்தை சென்றடைந்தனர்.

Input & Image courtesy: PIB

Next Story
கதிர் தொகுப்பு
Trending News