Kathir News
Begin typing your search above and press return to search.

பாகிஸ்தானை புகழ்ந்து பாடல் - 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்த போலீஸ்!

பாகிஸ்தானை புகழ்ந்து பாடல் - 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்த போலீஸ்!

ThangaveluBy : Thangavelu

  |  16 April 2022 2:05 PM GMT

உத்தரபிரதேச மாநிலம், பரேலி பகுதியில் பாகிஸ்தானை புகழ்ந்து பாட்டு பாடி, இந்திய தேசிய ஒற்றுமைக்கு இடையூறு ஏற்படுத்தியதாக இரண்டு பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

பரேலி பகுதியை சேர்ந்தவர் ஆஷிஷ் என்பவர் புகார் அளித்ததின் பேரில், பூட்டா பகுதியில் உள்ள சிங்கை முராவன் கிராமத்தை சேர்ந்த இரண்டு பேர் ஆவர். அதில் பாகிஸ்தானை புகழ்ந்து பாடும் பாடலை பாடியதற்காக இரண்டு பேரிடமும் ஆஷிஷ் வாக்குவாத்தில் ஈடுபட்டுள்ளார். ஆனால் ஆஷிஷ் கூறியதை ஏற்காமல் தொடர்ந்து பாகிஸ்தானை புகழ்ந்து பாட்டு பாடியபடியே இருந்தனர். இதனை ஆஷிஷ் தனது செல்போனில் வீடியோவாக எடுத்து ட்விட்டரில் பதிவிட்டார்.

இந்த வீடியோவை உத்தரபிரதேச காவல்துறை பார்வைக்கு சென்றதும், இரண்டு பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். விரைவில் அவர்கள் கைது செய்யப்படலாம் என்ற தகவலும் உறுதியாகியுள்ளது.

Source: Maalaimalar

Image Courtesy:News Nation

Next Story
கதிர் தொகுப்பு
Trending News