Kathir News
Begin typing your search above and press return to search.

2.23 கோடி டன்கள் நிலக்கரி கையிருப்பு உள்ளது: ராகுலின் பொய் குற்றசாட்டிற்கு மத்திய அமைச்சர் பதிலடி

2.23 கோடி டன்கள் நிலக்கரி கையிருப்பு உள்ளது: ராகுலின் பொய் குற்றசாட்டிற்கு மத்திய அமைச்சர் பதிலடி

ThangaveluBy : Thangavelu

  |  23 April 2022 2:05 AM GMT

இந்தியாவில் சில மாநிலங்களில் நிலக்கரி தட்டுப்பாடு ஏற்பட்டு மின் உற்பத்தியில் பாதிப்பு இருப்பதாக செய்திகள் வெளியாகிறது.

இதற்கு மத்தியில் வெறும் 8 நாட்களுக்கு மட்டுமே நிலக்கரி கையிருப்பு என்கின்ற நிலைக்கு இந்தியாவை பாஜக அரசு நிறுத்தியுள்ளது என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி குற்றச்சாட்டை முன்வைத்தார்.

இந்நிலையில், ராகுல் காந்தியின் ட்விட்டர் தகவலுக்கு மத்திய மின்துறை அமைச்சர் ஆர்.கே.சிங் பதிலடி அளித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ராகுல் காந்தி வெறும் 8 நாட்களுக்கு மட்டுமே நிலக்கரி கையிருப்பு இருப்பதாக தெரிவித்துள்ளார். அவருக்கு யார் இது போன்ற தகவலை அளிப்பார்கள் என்பது தெரியவில்லை. எந்த தகவலை சொன்னாலும் முழுமையாக சொல்வதில்லை. தற்போது இந்தியாவில் 2.23 கோடி டன்கள் நிலக்கரி கையிருப்பு இருக்கிறது. இவ்வாறு மத்திய அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

Source,Image Courtesy: Maalaimalar


Next Story
கதிர் தொகுப்பு
Trending News