Kathir News
Begin typing your search above and press return to search.

பார்வையற்ற நபரின் மகள் மருத்துவ கனவின் காரணம் கேட்டு உணச்சிவசப்பட்டு கண் கலங்கிய பிரதமர் மோடி

அரசு விழாவில் சிறுமியின் உருக்கமான பேச்சை கேட்டு பிரதமர் மோடி கண்கலங்கிய விவகாரம் நிகழ்வு ஏற்படுத்தியுள்ளது.

பார்வையற்ற நபரின் மகள் மருத்துவ கனவின் காரணம் கேட்டு உணச்சிவசப்பட்டு கண் கலங்கிய பிரதமர் மோடி

Mohan RajBy : Mohan Raj

  |  12 May 2022 12:15 PM GMT

அரசு விழாவில் சிறுமியின் உருக்கமான பேச்சை கேட்டு பிரதமர் மோடி கண்கலங்கிய நிகழ்வு பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

குஜராத்தில் பயனாளிகளுக்கு அரசின் நிதி உதவி வழங்கும் மாநில அரசின் திட்டங்கள் 100% நிறைவடைந்ததை கொண்டாடும் விதமாக பரூச் நகரில் விழா நடந்தது. இந்த விழாவின் காணொளி காட்சி வாயிலாக கலந்து கொண்ட பிரதமர் மோடி பயணிகளுடன் உரையாடினார்.

அப்பொழுது பார்வையற்ற மாற்றுத்திறனாளி ஒருவருடன் பேசிய மோடி உங்கள் மகள்களைப் படிக்க வைக்கிறீர்களா? என்ன படிக்கிறார்கள் என்று கேட்டார் அதற்கு பதிலளித்த அவர், 'தனது மூன்று மகள்களில் ஒருவர் மருத்துவராக விரும்புகிறார்' என பதிலளித்தார்.


அப்பொழுது பார்வையற்ற மாற்றுத்திறனாளியின் மூன்று மகள்களில் ஒருவரிடம் பிரதமர் மோடி பேசினார். மருத்துவ தொழிலை தேர்ந்தெடுத்ததற்கு என்ன காரணம் என கேட்டார் பிரதமர் அதற்கு பதிலளித்த அந்த சிறுமி தன் தந்தைக்கு ஏற்பட்ட பாதிப்பை பார்த்தே டாக்டர் ஆக ஆசைப்பட்டேன் எனக் கூறி கண்ணீர் விட்டார்.

இதைக் கேட்டு உணர்ச்சி வசப்பட்ட பிரதமர் மோடி சிறிது நேரம் அமைதியாக இருந்தார் பின்பு அந்த சிறுமியின் மன உறுதியை பாராட்டிய மோடி இந்த கருத்து தான் உங்கள் வலிமை என்றார். பின்னர் அவரது தந்தையிடம் உங்கள் மகளின் கனவை நனவாக்க உதவி தேவைப்பட்டால் அதனை செய்கிறேன் என உறுதியளித்தார்.


Source - Dinamalar

Next Story
கதிர் தொகுப்பு
Trending News