Kathir News
Begin typing your search above and press return to search.

அளவு கடந்த வெப்பம், அனல் காற்று - மாநிலங்களுடன் பிரதமர் அலுவலக முதன்மை செயலாளர் அவசர ஆலோசனை!

அளவு கடந்த வெப்பம், அனல் காற்று - மாநிலங்களுடன் பிரதமர் அலுவலக முதன்மை செயலாளர் அவசர ஆலோசனை!

ThangaveluBy : Thangavelu

  |  2 May 2022 10:37 AM GMT

இந்தியா முழுவதிலும் கடந்த சில நாட்களாக மிக கடுமையான வெப்பம் வாட்டி வ¬த்து வருகிறது. இதனால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். அதிலும் வடமாநிலங்களில் கடும் வெப்பம் நிலவி வருவதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம் என பல்வேறு வடமாநிலங்களில் வெப்பம் சுட்டெரித்து வருகிறது. கடந்த 100 ஆண்டுகளாக இல்லாத அளவுக்கு அதிகமான வெப்பம் தற்போது பதிவாகியிருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. மேலும், வடகிழக்கு மற்றும் மத்திய இந்தியாவில் கடந்த 122 ஆண்டுகளில் ஏப்ரல் மாத வெப்பநிலை இந்த ஆண்டிலேயே பதிவாகியுள்ளஐ. பல்வேறு மாநிலங்களில் 45 டிகிரி செல்சியசை அதிகரித்துள்ளது. இது போன்ற வெப்பத்தால் பொதுமக்கள் மிகப்பெரிய இன்னலுக்கு ஆளாகியுள்ளனர்.

இந்நிலையில், இந்தியா முழுவதும் மிகப்பெரிய வெப்பம் மற்றும் அனல் காற்று வீசி வருகிறது. இதற்கிடையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களை சேர்ந்த அதிகாரிகளுடன் பிரதமர் அலுவலக முதன்மைச் செயலாளர் பி.கே.மிஸ்ரா இன்று (மே 2) மாலை அவசரமாக ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த ஆலோசனையில் அதிகரித்து வரும் வெப்பம் மற்றும் அனல் காறறு வீசும் நிலையில் இந்த ஆலோசனைக் கூட்டம் மிக முக்கியம் வாய்ந்தவையாக கருதப்படும்.

Source, Image Courtesy: Daily Thanthi

Next Story
கதிர் தொகுப்பு
Trending News