சொத்துக்குவிப்பு வழக்கு: சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டார் இளவரசி.!
சொத்துக்குவிப்பு வழக்கு: சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டார் இளவரசி.!
![சொத்துக்குவிப்பு வழக்கு: சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டார் இளவரசி.! சொத்துக்குவிப்பு வழக்கு: சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டார் இளவரசி.!](https://kathir.news/static/c1e/client/83509/uploaded/18caae6b944d3207793153f530e1eb2f.jpg)
சொத்துக் குவிப்பு வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வந்த இளவரசியை சிறை நிர்வாகம் இன்று விடுதலை செய்தது. கடந்த 2017ம் ஆண்டு சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய 3 பேருக்கும் 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதனையடுத்து அவர்கள் பெங்களூருவில் உள்ள பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டனர்.
அவர்களின் தண்டனை காலம் முடிந்த நிலையில், கடந்த 27ம் தேதி இளவரசி விடுதலை செய்யப்பட்டார். இதனை தொடர்ந்து இன்று இளவரசி விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
சசிகலாவுக்கு உறவு முறையில் அண்ணியான இளவரசி மின்சார விபத்தின்போது தனது கணவரை இழந்த காரணத்தினால் சசிகலாவுடன் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா வீட்டிலேயே தங்கியிருந்தார். தற்போதைய நிலையில் போயஸ்கார்டனில் உள்ள வேதா நிலையத்தை நினைவு இல்லமாக தமிழக அரசு மாற்றியுள்ளது. இதனால் விடுதலை ஆன இளவரசி தனது மகன் வீட்டிற்கு செல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.