Kathir News
Begin typing your search above and press return to search.

ஊழல் என்பதற்கு இடமில்லை: அனைத்தையும் டிஜிட்டல் மையமாகி மக்களை பாதுகாக்கும் மத்திய அரசு!

இந்தியாவில் 19.79 கோடி குடும்ப அட்டைகள் டிஜிட்டல் மயமாக்கப் பட்டுள்ளன.

ஊழல் என்பதற்கு இடமில்லை: அனைத்தையும் டிஜிட்டல் மையமாகி மக்களை பாதுகாக்கும் மத்திய அரசு!

Bharathi LathaBy : Bharathi Latha

  |  27 March 2023 1:49 AM GMT

இந்தியாவில் 19.79 கோடி குடும்ப அட்டைகள் தேசிய உணவு பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் பொது விநியோக முறையில் டிஜிட்டல் மயமாக்கப்பட்டுள்ளன. இதற்கு ஏதுவாக அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களும் தங்களது வெளிப்படைத்தன்மையுடன் கூடிய இணைய முகப்பு வசதியை உருவாக்கியுள்ளன. பொது விநியோக முறையில்,5.33 லட்சம் நியாயவிலைக் கடைகளில் விற்பனைக்கான மின்னணு இயந்திரம் பொருத்தப்பட்டது. தகுதியான நபருக்கு பொருட்கள் சென்று சேர்வதை உறுதி செய்யும் வகையில் மின்னணு முறையிலான கைரேகைப்பதிவு, பொருட்கள் வாங்கியவுடன் நுகர்வோரின் செல்போனுக்கு தகவல் பரிமாற்றம் உள்ளிட்ட சீர்திருத்தங்களை மேற்கொண்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


நியாயவிலைக்கடைகளுக்கு ஒதுக்கப்படும் உணவு தானியங்களில் 95 சதவீதம் மின்னணு கைரேகைப்பதிவைப் பெற்றுக்கொண்டு விநியோகம் செய்யப்படுகிறது. 2024-ம் ஆண்டுக்குள் உணவு பாதுகாப்புச் சட்டம் மற்றும் மத்திய அரசின் மற்ற நலத்திட்டங்களின் கீழ், செறிவூட்டப்பட்ட அரிசியை பொது விநியோக முறையில் விற்பனை செய்ய மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதற்கான பணிகள் ஏற்கனவே தொடங்கப்பட்டன.


முதற்கட்டமாக மார்ச் 2022-க்குள் நாடு முழுவதும் ஒருங்கிணைந்த குழந்தை மேம்பாட்டுத் திட்டமும். பிரதமரின் ஊட்டச்சத்து திட்டமும் செயல்படுத்தப் பட்டுள்ளது. தற்போது 27 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் பொது விநியோகம் மூலம் செறிவூட்டப்பட்ட அரிசி, விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. மார்ச் 2023 வரை தோராயமாக 95.72 லட்சம் மெட்ரிக் டன் செறிவூட்டப்பட்ட அரிசி இரண்டாம் கட்டமாக விநியோகம் செய்யப்பட்டுள்ளது.

Input & Image courtesy: News

Next Story
கதிர் தொகுப்பு
Trending News