டெல்லி வன்முறைக்கு தண்டனை கடுமையாக இருக்கனும்.. முதலமைச்சர் கெஜ்ரிவால் வேண்டுகோள்!
டெல்லி வன்முறைக்கு தண்டனை கடுமையாக இருக்கனும்.. முதலமைச்சர் கெஜ்ரிவால் வேண்டுகோள்!
![டெல்லி வன்முறைக்கு தண்டனை கடுமையாக இருக்கனும்.. முதலமைச்சர் கெஜ்ரிவால் வேண்டுகோள்! டெல்லி வன்முறைக்கு தண்டனை கடுமையாக இருக்கனும்.. முதலமைச்சர் கெஜ்ரிவால் வேண்டுகோள்!](https://kathir.news/static/c1e/client/83509/uploaded/fcaf3a171a75f4d4019f281804543692.jpg)
தலைநகர் டெல்லியில் விவசாயிகள் நடத்திய பேரணியில் மிகப்பெரிய வன்முறை ஏற்பட்டது. இந்த வன்முறைக்கு காரணமானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அம்மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கோரிக்கை விடுத்துள்ளார்.
கடந்த ஜனவரி 26ம் தேதி விவசாயிகள் மிகப்பெரிய டிராக்டர் பேரணி நடத்தினர். இந்த பேரணியானது சில விநாடிகளிலேயே கலவரமாக மாறியது. இந்த கலவரத்தை கட்டுப்படுத்த போலீசார் முயற்சி செய்தனர். ஆனால் போராட்டத்தில் கலந்து கொண்ட தீவிரவாத கும்பல் அரசு சொத்துக்களை சேதப்படுத்தியதுடன், போலீசாரையும் கடுமையாக தாக்கினர். இதில் 100க்கும் மேற்பட்ட போலீசார் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த கலவரம் தொடர்பாக டெல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர். ஒரு சிலரை கைது செய்து அவர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியதாவது: விவசாயிகள் போர்வையில் நடந்த வன்முறை சம்பவங்களை சகித்துக்கொள்ள முடியாது. குற்றவாளிகளுக்கு தக்க தண்டனை வழங்க வேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.