Kathir News
Begin typing your search above and press return to search.

கிறிஸ்தவ மிஷனரிகள் சத்சங்கம் - கட்டாய மத மாற்ற முயற்சி உள்ளூர் மக்களால் முறியடிப்பு!

கிறிஸ்தவ மிஷனரிகள் சத்சங்கம் - கட்டாய மத மாற்ற முயற்சி  உள்ளூர் மக்களால் முறியடிப்பு!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  24 May 2022 9:51 AM GMT

பஞ்சாபின் மொஹாலி மாவட்டம், தகோலி, கிரீன் சிட்டியில் உள்ள ஒரு சமூகக் கூடத்தில் இரண்டு நாள் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்த கிறிஸ்தவ மிஷனரிகளுக்கு எதிராக இந்து அமைப்புகளும் உள்ளூர் மக்களும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

மிஷனரிகள் உள்ளூர் மக்களை கிறிஸ்தவ மதத்திற்கு மாற்றுவதாகவும், அங்கு அமர்ந்திருந்தவர்கள் வெளியில் இருந்து அழைத்து வரப்பட்டதாகவும் அவர்கள் குற்றம் சாட்டினர்.

சந்தேகத்திற்குரிய மிஷனரி நிகழ்வு

இரண்டு நாள் நிகழ்வு மே 21 அன்று மாலை சுமார் 5 மணிக்கு தொடங்கியது. சர்ச் குழு உறுப்பினர்கள் சமுதாய கூடத்திற்கு வெளியே கூடி, ஒலிபெருக்கியில் அறிவிப்புகளை வெளியிட்டனர். மக்கள் வந்து 'இயேசு கிறிஸ்துவின் அற்புதங்களை அனுபவிக்க' வருமாறு அழைப்பு விடுத்தனர்.

உங்களில் யாருக்காவது நிதி அல்லது உடல்நலப் பிரச்சனைகள் இருந்தால், வந்து இயேசு கிறிஸ்துவின் ஆசீர்வாதங்களைப் பெறுங்கள் எனக்கூறி பொதுமக்களை கவர முயற்சி செய்தனர்.

நிகழ்ச்சியின் முதல் நாளில் உள்ளூர் மக்களின் எதிர்ப்பை சர்ச் குழுவினர் எதிர்கொண்டதால், இரண்டாவது நாளில், அவர்கள் 'பாதுகாப்பு'க்காக போலீசாருடன் வந்தனர். இருப்பினும், இந்து குழுக்களும் உள்ளூர் மக்களும் நிகழ்ச்சியைத் தொடர அனுமதிக்கவில்லை.

இதில் ஆட்சேபனை என்னவென்றால், சர்ச் குழுவின் பேச்சாளர்களைக் கேட்க உள்ளூர்வாசிகள் யாரும் இல்லை. அங்கு ஒருவர் கூட உட்காரவில்லை என்றும், அனைவரும் வெளியூர்களில் இருந்து கொண்டு வரப்பட்டவர்கள் என்றும் அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டினர்.



Next Story
கதிர் தொகுப்பு
Trending News