நாடு முழுவதும் ரெயில் நிலையங்களில் பொது இணையதள சேவைகளை எளிமைப்படுத்த PM-WANI என்ற திட்டத்தை Railtel தொடங்கியது. நாடு முழுவதும் 6 ஆயிரத்து 102 ரெயில் நிலையங்களில் இணைய சேவை இலவசமாக கிடைத்து வருகிறது. பொதுத்துறை நிறுவனமான Railtel, இந்த சேவையை அளித்து வருகிறது.
இந்த சேவையை மேலும் எளிமைப்படுத்தவும், பிராண்ட் பேண்ட் வேகத்தில் மக்கள் இணையத்தை பயன்பாட்டுக்கு பரவலாக்கவும் PM-WANI என்ற திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. அனைத்து வை-பை சேவைகளையும் இணைக்க மத்திய தொலை தொடர்புத்துறை இத்திட்டத்தை உருவாக்கி உள்ளது.
இதை செயல்படுத்த Railtel நிறுவனம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. முதல் கட்டமாக 100 ரெயில் நிலையங்களில் PM-WANI திட்டம் தொடங்கப்பட்டது. Railtel தலைவரும், நிர்வாக இயக்குனருமான புனீத் சாவ்லா டெல்லியில் நடந்த நிகழ்ச்சியில்தொடங்கி வைத்தார்.
வருகிற ஜூன் மாதத்துக்குள், தற்போது வைபை வசதி உள்ள மொத்தம் 6102 ரெயில் நிலையங்களுக்கும் இத்திட்டம் விரிவுபடுத்தப்படும் என்று புனீத் சாவ்லா தெரிவித்தார். இத்திட்டத்தை பயன்படுத்த ஆன்ட்ராய்டு தொழில்நுட்பம் அடிப்படையிலான ஸ்மார்ட்போனில் கூகுள் பிளேஸ்டோருக்கு சென்று, 'Wi-DOT' என்ற செயலியை பதிவிறக்கம் செய்ய வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
Inputs From: Financialexpress