சரக்கு ரயில் வருவாய் ரூ.92,345 கோடியாக அதிகரிப்பு - ரயில்வே செய்த அசால்ட்டான சாதனை!
By : Kathir Webdesk
வருவாய் அதிகரிப்பு
இந்திய ரயில்வேயின் சரக்கு வருவாய் கடந்த ஆண்டோடு ஒப்பிடும்போது, நடப்பு நிதியாண்டின் முதல் 7 மாதங்களில் 17சதவிகிதம் அதிகரித்துள்ளது.
நடப்பாண்டு ஏப்ரல் முதல், அக்டோபர் மாதம் வரையிலான 7 மாதக் காலகட்டத்தில், சரக்கு ரயில் மூலம் 855.63 மெட்ரிக் டன் சரக்குகள் கையாளப்பட்டுள்ளன. இது கடந்த ஆண்டு 786.2 மெட்ரிக் டன்னாக இருந்தது. இதனால், சரக்குகள் கையாளுதல் கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது, 9 சதவிகிதம் அதிகரித்துள்ளது.
ரூ.92,345 கோடிவருவாய்
கடந்த அக்டோபர் மாத சரக்குரயில் வருவாய் ரூ.78,921 கோடியாக இருந்த நிலையில், இந்த ஆண்டு வருவாய் ரூ.92,345 கோடியாக அதிகரித்துள்ளது. இதன்மூலம், சரக்குரயில் வருவாய் 17சதவிகிதம் அதிகரித்துள்ளது.
அதேநேரத்தில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 117,34 மெட்ரிக் டன்னாக இருந்த சரக்குகள் கையாளுதல் இந்த அக்டோபர் மாதம் 118,94 மெட்ரிக் டன்னாக அதிகரித்துள்ளது. இதன் மூலம் அக்டோபர் மாதத்தில் மட்டும் சரக்கு ரயில் வருவாய் 8% அதிகரித்துள்ளது. இந்திய ரயில்வே மீது கொண்ட நம்பிக்கைக்கு சாட்சியாக இந்த வருவாய் உயர்வு அமைந்துள்ளது.
Input From: swarajyamag