திருமண நாளில் மனைவிக்குச் சந்திரனில் நிலத்தைப் பரிசாக வழங்கிய கணவன்.!
திருமண நாளில் மனைவிக்குச் சந்திரனில் நிலத்தைப் பரிசாக வழங்கிய கணவன்.!
By : Saffron Mom
உலகம் நவீன முறையில் மாறிக்கொண்டே இருக்கும் நேரத்தில், அனைத்து நிலைகளிலும் மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றது. அதனைத் தொடர்ந்து தற்போது பிறந்தநாள், திருமண நாள் போன்ற நிகழ்ச்சிகளுக்குப் பரிசளிக்கும் முறையும் புதிதாக விண்ணைத்தாண்டி கூட சென்று கொண்டிருக்கின்றது. தற்போது ஒரு கணவன் தன் திருமண நாளை முன்னிட்டு தன் மனைவிக்குப் பரிசாக நிலவில் மூன்று ஏக்கர் நிலத்தைப் பரிசளித்துள்ளார்.
ராஜஸ்தான் அஜ்மீர் பகுதியைச் சேர்ந்த அமன் தன் மனைவிக்கு நிலாவில் மூன்று ஏக்கர் நிலத்தைத் திருமண நாளிற்குப் பரிசாக அளித்துள்ளார். அந்த நபர், தர்மேந்திர அனிஜா, தன் மனைவி சப்னா அனுஜாவுக்கு எட்டாவது திருமண நாளில் சிறப்பான பரிசை அளிக்க விரும்பியதாகவும், அதனால் நிலாவில் இடம் வாங்கியதாகத் தெரிவித்தார். "டிசம்பர் 24 இல் எங்களின் எட்டாவது திருமண நாளாகும். என் மனைவிக்காக ஏதாது சிறப்பாகச் செய்யவிரும்பினேன். எல்லோரும் பூமியில் இருக்கக்கூடிய கார், மோதிரம் நகை போன்றவற்றைப் பரிசாக அளிப்பர், ஆனால் நான் வேறு ஏதாவது செய்ய விரும்பினேன். அதற்காகவே சந்திரனில் நிலம் வாங்கினேன்," என்று தர்மேந்திர அனிஜா தெரிவித்தார்.
தர்மேந்திர அனிஜா சர்வதேச லூனா சமூகத்தின் மூலம் நிலம் வாங்கியுள்ளார். இதற்கான மொத்த வேலைகள் முடிய ஒரு வருடம் ஆனது. "ராஜஸ்தானில் முதலில் சந்திரனில் நிலம் வாங்கியவர் நான் என்பதில் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்," என்று அவர் குறிப்பிட்டார்.
இதுபோன்று உலகத்துக்கு வெளியே என் கணவன் பரிசளிப்பார் என்று எதிர்பார்க்கவில்லை என்று சப்னா அனிஜா கூறினார். "இதுபோன்று ஒரு பரிசளித்ததில் மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. இந்த நிகழ்ச்சியானது நிகழ்ச்சி அமைப்பாளர்களால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது," என்று சப்னா குறிப்பிட்டார்.
விண்வெளிகளில் தனிபட்ட உரிமைகளுக்கு வாய்ப்பில்லை என்றாலும், பரிசுகள் வழங்கும் வலைத்தளங்கள் சில அதற்கான வாய்ப்பை வாங்கி மற்றும் அதற்குச் சான்றிதழையும் வழங்குகின்றது. 2018 இல் மறைந்த சுஷாந்த் சிங் ராஜ்புத் நிலவிற்குத் தொலைதூரம் உள்ள 'மாஸ்கோவின் கடல்' என்று கூறப்படும் இடத்தில் ஒரு பகுதியை வாங்கியிருந்தார். சில நாட்களுக்கு நீரஜ் ராஜ், சுஷாந்த் சிங் மற்றும் ஷாருக்கான் போன்ற நடிகர்களால் ஈர்க்கப்பட்டு தனது பிறந்தநாளில் ஒரு ஏக்கர் நிலத்தை வாங்கினார்.