Kathir News
Begin typing your search above and press return to search.

நெஞ்சுவலியால் ஜனாதிபதி மருத்துவமனையில் அனுமதி: நலம் விசாரித்த பிரதமர் மோடி.!

முதற்கட்டமாக பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து மருத்துவமனை கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளார். தற்போது அவரது உடல்நிலை சீராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நெஞ்சுவலியால் ஜனாதிபதி மருத்துவமனையில் அனுமதி: நலம் விசாரித்த பிரதமர் மோடி.!

ThangaveluBy : Thangavelu

  |  26 March 2021 1:19 PM GMT

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்க்கு நெஞ்சு வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது பற்றி ராணுவ மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், நெஞ்சி வலி காரணமாக டெல்லி ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.




அவருக்கு முதற்கட்டமாக பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து மருத்துவமனை கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளார். தற்போது அவரது உடல்நிலை சீராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே பிரதமர் மோடி வெளிநாட்டில் இருந்து, ஜனாதிபதி உடல்நிலை குறித்து விசாரித்தார். விரைவில் அவர் பூரணம் குணமடைய வேண்டும் என தெரிவித்துள்ளார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News