Kathir News
Begin typing your search above and press return to search.

மதரசாவில் வைத்து 13 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் - மதகுருமார்களால் அதிகரிக்கும் பாலியல் வன்கொடுமை!

Rise in sexual assault by Muslim clerics Rapes committed inside madrassa

மதரசாவில் வைத்து 13 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் - மதகுருமார்களால் அதிகரிக்கும் பாலியல் வன்கொடுமை!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  5 March 2022 3:21 AM GMT

மதரசாவில் 13 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக மவுல்வி ஷராபுதீன் என்ற மதகுருவை கேரள போலீசார் கைது செய்தனர். அவர் சிறுமியை பலமுறை கற்பழித்து, கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

பிப்ரவரி 25 அன்று சிறுமிக்கு கடுமையான வயிற்று வலியால் ஏற்பட்டது. உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அவர் கர்ப்பமாக இருப்பதாக மருத்துவர்கள் அறிவித்தனர். உண்மையைச் சொன்னால் தனது குடும்பத்தினரை கொன்று விடுவதாக மௌலவி மிரட்டியதால் சிறுமி உண்மையை ஒப்புக்கொள்ளவில்லை.

உண்மையை வெளியே சொன்னால் தங்களுக்கு எதுவும் ஆகாது என்று குடும்பத்தினர் சிறுமியை நம்ப வைத்த பிறகே நடந்ததை வெளியில் கூறினார். மதரஸாவில் உதவியாளராகப் பணிபுரிந்த ஷராபுதீன், வழக்கமான வகுப்புக்கு முன்பே சிறுமியை மதரஸாவுக்கு வரவழைத்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

கற்பழிப்பு காட்சியை வீடியோ கேமராவில் பதிவு செய்து, மிரட்டுவதற்காக பயன்படுத்தியுள்ளார். மதகுரு மீது போக்சோ சட்டதின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதே போல கடந்த இரு மாதங்களுக்கு முன்பு, ஹைதராபாத்தில் 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த இஸ்லாமிய மதகுரு கைது செய்யப்பட்டுள்ளார்

ஜனவரி 26 அன்று மற்றொரு சம்பவத்தில், உத்தரபிரதேசத்தின் மெயின்புரி பகுதியில் உள்ள மசூதிக்குள் 8 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததற்காக இமாம் ஜமால் அகமது கைது செய்யப்பட்டார். சமீப காலமாக முஸ்லீம் மதகுருமார்களால் பாலியல் வன்கொடுமை செய்யப்படும் சம்பவம் அதிகரித்துள்ளது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News