Kathir News
Begin typing your search above and press return to search.

ஆர்டிஜிஎஸ் சேவை: ரிசர்வ் வங்கி வெளியிட்ட புதிய உத்தரவு.!

தொழில்நுட்ப ரீதியிலான மேம்பாட்டு பணிகள் நடைபெறவிருப்பதால், வருகின்ற ஞாயிறு அன்று நள்ளிரவு 12 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை ஆர்டிஜிஎஸ் பணபரிவர்த்தனை சேவைகள் நடைபெறாது என்று ரிசர்வ் வங்கி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

ஆர்டிஜிஎஸ் சேவை: ரிசர்வ் வங்கி வெளியிட்ட புதிய உத்தரவு.!

ThangaveluBy : Thangavelu

  |  13 April 2021 3:19 AM GMT

வருகின்ற ஏப்ரல் 18ம் தேதி கிட்டத்தட்ட 14 மணி நேரம் ஆர்டிஜிஎஸ் சேவை பண பரிவர்த்தனை செய்ய முடியாது என்று இந்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. மேலும் 2 லட்சம் ரூபாய்க்கு மேற்பட்ட பரிவர்த்தனை மட்டுமே ஆர்டிஜிஎஸ் முறையில் செயல்படுத்த முடியும்.





இதனிடையே தொழில்நுட்ப ரீதியிலான மேம்பாட்டு பணிகள் நடைபெறவிருப்பதால், வருகின்ற ஞாயிறு அன்று நள்ளிரவு 12 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை ஆர்டிஜிஎஸ் பணபரிவர்த்தனை சேவைகள் நடைபெறாது என்று ரிசர்வ் வங்கி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இது குறித்து அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் முன்னதாகவே தெரிவிக்கப்பட்டு, பரிவர்த்தனையை திட்டமிட வங்கிகள் தெரிவிக்க வேண்டும் எனவும் ரிசர்வ் வங்கி அறிவுரை கூறியுள்ளது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News