முதன்முறையாக மாதத்தின் சிறந்த காவலர்கள் விருதைப் பெறும் 'ரூபி எனும் நாய்'.!
முதன்முறையாக மாதத்தின் சிறந்த காவலர்கள் விருதைப் பெறும் 'ரூபி எனும் நாய்'.!
By : Bharathi Latha
"சாரங்கர் காவல் நிலையத்தின் கீழ் உள்ள சாரங்கர் ராஜ் மஹாலில், சுமார் 6 லட்சம் ரூபாய் விலை உயர்ந்த இரண்டு வெள்ளி தட்டுகள் திருடப்பட்டன. ரூபி உதவியுடன் வீரேந்திரா அவற்றை மீட்டு குற்றம் சாட்டப்பட்டவர்களைப் பிடித்தார்" என்று சந்தோஷ் சிங் மேலும் கூறினார்.
சந்தோஷ் சிங் மேலும், "ஒவ்வொரு மாதமும் நல்ல வேலையைச் செய்யும் காவல்துறையினர் மாதத்தின் காவலராக அறிவிக்கப்படுவதன் மூலம் ஊக்குவிக்கப்படுகிறார்கள். அவர்களின் புகைப்படங்கள் வெவ்வேறு காவல் நிலையங்களில் சில பண விருதுகளுடன் வைக்கப்படுகின்றன" என்றார்.
இந்த நாயுடன் சேர்த்து இரண்டு காவல்துறையினருக்கும், மாதத்தின் சிறந்த காவலர் விருது வழங்கப்பட்டுள்ளதாக சந்தோஷ் சிங் மேலும் தெரிவித்தார். இந்த இருவரில் ஒருவர் சட்டம் ஒழுங்கு பிரிவைச் சேர்ந்தவர் ஆவார். மற்றொருவர் நாய் கையாளுபவர் வீரேந்திரா ஆவார். எனவே சிறந்த காவலருக்கான விருதை இந்த முதல் முறையாக ரூபி என்ற நாய் பெறுவது குறிப்பிடத்தக்கது.