Kathir News
Begin typing your search above and press return to search.

மதம் மாறினால் எஸ்.சி அந்தஸ்து/சலுகை கிடைக்குமா? மத்திய அரசு சொல்லப்போகும் முடிவு!

மதம் மாறினால் எஸ்.சி அந்தஸ்து/சலுகை கிடைக்குமா? மத்திய அரசு சொல்லப்போகும் முடிவு!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  8 Oct 2022 5:26 AM GMT

மதம் மாறிய தாழ்த்தப்பட்டோருக்கு எஸ்.சி. அந்தஸ்து வழங்க கோருவது குறித்து ஆய்வு செய்ய உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி பாலகிருஷ்ணன் தலைமையில் 3 பேர் அடங்கிய ஆணையத்தை மத்திய அரசு நியமித்துள்ளது.

இது குறித்து மத்திய அரசு கொடுத்த விளக்கம்;

சமூக ரீதியாக புறக்கணிக்கப்பட்ட மக்களுக்கு எஸ்சி. அந்தஸ்து வழங்கப்பட்டிருக்கிறது. இந்த சூழலில் இதர மதங்களை சேர்ந்தோருக்கும் எஸ்.சி. அந்தஸ்து வழங்க சில குழுக்கள் கோரிக்கை விடுத்துள்ளன.

புதியவர்களுக்கு எஸ்.சி. அந்தஸ்து வழங்க தற்போது அந்த பிரிவில் உள்ள மக்களும் ஆட்சேபம் தெரிவித்து வருகின்றனர்.

இதுகுறித்து ஆய்வு செய்ய உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் தலைமையில் ஆணையம் அமைக்கப்படுகிறது. இதில் ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி ரவீந்தர் குமார் ஜெயின், பல்கலைக்கழக மானியக் குழுவை சேர்ந்தசுஷ்மா யாதவ் ஆகியோர் உறுப்பினர்களாக செயல்படுவார்கள்.

எஸ்.சி. அந்தஸ்து கோரும் புதியவர்களின் கோரிக்கைகளை ஆணையம் பரிசீலிக்கும். புதியவர்களை சேர்த்தால் தற்போது எஸ்.சி. பிரிவில் இடஒதுக்கீடு பெறுவோருக்கு ஏற்படும் பாதிப்புகள் மற்றும் இதர விவகாரங்கள் குறித்து ஆணையம் ஆய்வு செய்யும். ஆணைய தலைவர் பதவியேற்ற நாளில் இருந்து 2 ஆண்டுகளில் அரசிடம் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

Input From: Hindu

Next Story
கதிர் தொகுப்பு
Trending News